தோல்வியிலிருந்து மீண்டு வருவது கடினமாக உள்ளது - ரோஹித் சர்மா!
Jul 29, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்வியிலிருந்து மீண்டு வருவது கடினமாக உள்ளது – ரோஹித் சர்மா!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா உலகக்கோப்பையில் அடைந்த தோல்வியைக் குறித்து முதல் முறையாக ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் லீக் சுற்றில் நடைபெற்ற 9 போட்டிகளில் 9 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது.

அரையிறுதி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு 20 வருடங்களுக்குப் பிறகு தகுதி பெற்றது. அனைவரும் இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றி பெரும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இந்தியா அணி தோல்வியைத் தழுவியது.

இந்தியா தோல்வியடைந்த உடனே மைதானத்திலே சில வீரர்கள் அழுது தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா உலகக்கோப்பையைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்த நிலையில் தற்போது அணியின் தோல்வியைக் குறித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர், ” உலகக்கோப்பை தோல்வியிலிருந்து எப்படி கம்பேக் கொடுப்பது என்பதற்கான யோசனை என்னிடம் இல்லை. முதல் சில நாட்களில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சமயங்களில் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சுற்றியிருந்தது ஓரளவு ஆறுதலாக இருந்தது. இந்த தோல்வியை ஜீரணிப்பது எளிதல்ல. ஆனால் வாழ்க்கை நகர்வதால் நாமும் வாழ்க்கையுடன் நகர வேண்டும்.

உண்மையாகத் தோல்வியிலிருந்து நகர்வது மிகவும் கடினமாக இருக்கிறது. நான் 50 ஓவர் உலகக்கோப்பையைத் தான் அதிகமாகப் பார்த்து வளர்ந்தேன். 50 ஓவர் உலகக்கோப்பை என்பதுதான் நான் வெல்ல விரும்பிய மிகப்பெரிய பரிசு. இதற்காகக் கடந்த பல வருடங்களாக உழைத்தும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

அதனால் இப்போது அதை நினைத்தாலும் ஏமாற்றமும் எரிச்சலும் வருகிறது. ஏனெனில் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் வெற்றிக்காகச் செய்தோம். ஒருவேளை என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால் 10 தொடர்ச்சியான வெற்றிகள் பெற்றதை தான் நான் சொல்வேன்” என்று கூறினார்.

Tags: rohith sharmaindian cricket player
ShareTweetSendShare
Previous Post

கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா – களைகட்டிய மேல்மலையனூர்!

Next Post

ஒரு கிலோ ரூ.3,000 – க்கு விற்பனையாகும் மல்லிகை பூ – என்ன காரணம் தெரியுமா?

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies