வரலாறு தெரியாதவரா அமித்ஷா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!
Sep 27, 2025, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாறு தெரியாதவரா அமித்ஷா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது என்று ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், வரலாற்றை நன்கு அறிந்தவர் அமித்ஷா என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத் தொடரை வரும் 22-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தொடரில் தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2023 ஆகிய இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது.

இதையடுத்து, விவாதத்தின் மீது கடந்த 6-ம் தேதி பதிலளித்துப் பேசிய அமித்ஷா, “1947-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் நம் நாட்டு இராணுவம் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை அடைந்தபோது, நேரு திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

இதனால்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. 3 நாட்கள் கழித்து போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நம்மிடம் வந்திருக்கும். நீண்டகாலத்துக்குப் பிறகு, ‘போர் நிறுத்தம் அறிவித்தது தவறுதான்’ என்று நேருவே தெரிவித்தார். அது  தவறு அல்ல வரலாற்றுப் பிழை.

அதேபோல, மற்றொரு பிழை, காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது. நமது பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம். இது வரலாற்று பிழை” என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரியும் என்று எதிர்பார்க்க முடியாது. வரலாறை மாற்றி எழுதும் பழக்கம் மட்டுமே அவருக்கு உண்டு” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கும் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர், “370-வது சட்டப்பிரிவு ஏன் உருவாக்கப்பட்டது, எதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். 370-வது பிரிவு தற்காலிகமானது என்பதுதான் வரலாற்றின் உண்மை. அந்த வரலாற்றை நன்கு அறிந்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. நாம் அனைவரும் அவரிடமிருந்து வரலாற்றை நிறைய கற்றுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: rahul gandhiRavi Shankar Prasad MPAmit sha
ShareTweetSendShare
Previous Post

இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

Next Post

“உழைத்திடுவோம், மகிழ்ந்திடுவோம் ” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Related News

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies