வரலாறு தெரியாதவரா அமித்ஷா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!
Nov 12, 2025, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாறு தெரியாதவரா அமித்ஷா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது என்று ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், வரலாற்றை நன்கு அறிந்தவர் அமித்ஷா என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத் தொடரை வரும் 22-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தொடரில் தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2023 ஆகிய இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது.

இதையடுத்து, விவாதத்தின் மீது கடந்த 6-ம் தேதி பதிலளித்துப் பேசிய அமித்ஷா, “1947-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் நம் நாட்டு இராணுவம் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை அடைந்தபோது, நேரு திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

இதனால்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. 3 நாட்கள் கழித்து போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நம்மிடம் வந்திருக்கும். நீண்டகாலத்துக்குப் பிறகு, ‘போர் நிறுத்தம் அறிவித்தது தவறுதான்’ என்று நேருவே தெரிவித்தார். அது  தவறு அல்ல வரலாற்றுப் பிழை.

அதேபோல, மற்றொரு பிழை, காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது. நமது பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம். இது வரலாற்று பிழை” என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரியும் என்று எதிர்பார்க்க முடியாது. வரலாறை மாற்றி எழுதும் பழக்கம் மட்டுமே அவருக்கு உண்டு” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கும் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர், “370-வது சட்டப்பிரிவு ஏன் உருவாக்கப்பட்டது, எதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். 370-வது பிரிவு தற்காலிகமானது என்பதுதான் வரலாற்றின் உண்மை. அந்த வரலாற்றை நன்கு அறிந்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. நாம் அனைவரும் அவரிடமிருந்து வரலாற்றை நிறைய கற்றுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Ravi Shankar Prasad MPAmit sharahul gandhi
ShareTweetSendShare
Previous Post

இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

Next Post

“உழைத்திடுவோம், மகிழ்ந்திடுவோம் ” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies