வரலாறு தெரியாதவரா அமித்ஷா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!
Mar 15, 2026, 09:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாறு தெரியாதவரா அமித்ஷா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 13, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது என்று ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், வரலாற்றை நன்கு அறிந்தவர் அமித்ஷா என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத் தொடரை வரும் 22-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தொடரில் தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2023 ஆகிய இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது.

இதையடுத்து, விவாதத்தின் மீது கடந்த 6-ம் தேதி பதிலளித்துப் பேசிய அமித்ஷா, “1947-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் நம் நாட்டு இராணுவம் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை அடைந்தபோது, நேரு திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

இதனால்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. 3 நாட்கள் கழித்து போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நம்மிடம் வந்திருக்கும். நீண்டகாலத்துக்குப் பிறகு, ‘போர் நிறுத்தம் அறிவித்தது தவறுதான்’ என்று நேருவே தெரிவித்தார். அது  தவறு அல்ல வரலாற்றுப் பிழை.

அதேபோல, மற்றொரு பிழை, காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது. நமது பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம். இது வரலாற்று பிழை” என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரியும் என்று எதிர்பார்க்க முடியாது. வரலாறை மாற்றி எழுதும் பழக்கம் மட்டுமே அவருக்கு உண்டு” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கும் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர், “370-வது சட்டப்பிரிவு ஏன் உருவாக்கப்பட்டது, எதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். 370-வது பிரிவு தற்காலிகமானது என்பதுதான் வரலாற்றின் உண்மை. அந்த வரலாற்றை நன்கு அறிந்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. நாம் அனைவரும் அவரிடமிருந்து வரலாற்றை நிறைய கற்றுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: rahul gandhiRavi Shankar Prasad MPAmit sha
ShareTweetSendShare
Previous Post

இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

Next Post

“உழைத்திடுவோம், மகிழ்ந்திடுவோம் ” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies