சட்ட விரோதக் குடியேற்றம்: கைது செய்ய நடவடிக்கை... மத்திய அரசு தகவல்!
Jul 24, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட விரோதக் குடியேற்றம்: கைது செய்ய நடவடிக்கை… மத்திய அரசு தகவல்!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டினர் திருட்டுத்தனமாக ஊடுருவுவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநட்டினரின் தரவுகளை துல்லியமாக சேகரிப்பது சாத்தியமில்லை. எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அஸ்ஸாம் மாநிலத்துக்குள் நுழைந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கத்தில், நமது குடியுரிமைச் சட்டத்தில் 6ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி, 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 25-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், நமது நாட்டிற்குள் நுழைந்த வங்கதேசத்தினருக்கு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த குடியுரிமைச் சட்டத்தின் 6ஏ பிரிவின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனு கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 1971 மார்ச் 25-ம் தேதிக்குப் பிறகு அஸ்ஸாம் மாநிலம் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளில் குடியேறியவர்களின் தரவுகளை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின்படி, 1966 – 1971 காலக்கட்டத்தில் 32,381 பேர் வெளிநாட்டினராக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் 17,861 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அஸ்ஸாம் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதிகளில் குடியேறிய வெளிநாட்டினரின் தரவுகளை துல்லியமாகக் கண்டறிவது கடினமான காரியம். காரணம், அவர்கள் திருட்டுத்தனமாக ஊடுருவியவர்கள். எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்யும் கடினமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: AssamIllegal migrantBangladeshi
ShareTweetSendShare
Previous Post

கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

முதலமைச்சராக பதவியேற்ற மோகன் யாதவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

Load More

அண்மைச் செய்திகள்

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies