சட்ட விரோதக் குடியேற்றம்: கைது செய்ய நடவடிக்கை... மத்திய அரசு தகவல்!
Mar 15, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட விரோதக் குடியேற்றம்: கைது செய்ய நடவடிக்கை… மத்திய அரசு தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 13, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டினர் திருட்டுத்தனமாக ஊடுருவுவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநட்டினரின் தரவுகளை துல்லியமாக சேகரிப்பது சாத்தியமில்லை. எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அஸ்ஸாம் மாநிலத்துக்குள் நுழைந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கத்தில், நமது குடியுரிமைச் சட்டத்தில் 6ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி, 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 25-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், நமது நாட்டிற்குள் நுழைந்த வங்கதேசத்தினருக்கு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த குடியுரிமைச் சட்டத்தின் 6ஏ பிரிவின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனு கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 1971 மார்ச் 25-ம் தேதிக்குப் பிறகு அஸ்ஸாம் மாநிலம் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளில் குடியேறியவர்களின் தரவுகளை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின்படி, 1966 – 1971 காலக்கட்டத்தில் 32,381 பேர் வெளிநாட்டினராக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் 17,861 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அஸ்ஸாம் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதிகளில் குடியேறிய வெளிநாட்டினரின் தரவுகளை துல்லியமாகக் கண்டறிவது கடினமான காரியம். காரணம், அவர்கள் திருட்டுத்தனமாக ஊடுருவியவர்கள். எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்யும் கடினமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: AssamIllegal migrantBangladeshi
ShareTweetSendShare
Previous Post

கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

முதலமைச்சராக பதவியேற்ற மோகன் யாதவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies