சட்ட விரோதக் குடியேற்றம்: கைது செய்ய நடவடிக்கை... மத்திய அரசு தகவல்!
Oct 28, 2025, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட விரோதக் குடியேற்றம்: கைது செய்ய நடவடிக்கை… மத்திய அரசு தகவல்!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டினர் திருட்டுத்தனமாக ஊடுருவுவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநட்டினரின் தரவுகளை துல்லியமாக சேகரிப்பது சாத்தியமில்லை. எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அஸ்ஸாம் மாநிலத்துக்குள் நுழைந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கத்தில், நமது குடியுரிமைச் சட்டத்தில் 6ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி, 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 25-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், நமது நாட்டிற்குள் நுழைந்த வங்கதேசத்தினருக்கு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த குடியுரிமைச் சட்டத்தின் 6ஏ பிரிவின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனு கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 1971 மார்ச் 25-ம் தேதிக்குப் பிறகு அஸ்ஸாம் மாநிலம் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளில் குடியேறியவர்களின் தரவுகளை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின்படி, 1966 – 1971 காலக்கட்டத்தில் 32,381 பேர் வெளிநாட்டினராக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் 17,861 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அஸ்ஸாம் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதிகளில் குடியேறிய வெளிநாட்டினரின் தரவுகளை துல்லியமாகக் கண்டறிவது கடினமான காரியம். காரணம், அவர்கள் திருட்டுத்தனமாக ஊடுருவியவர்கள். எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்யும் கடினமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: AssamIllegal migrantBangladeshi
ShareTweetSendShare
Previous Post

கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

முதலமைச்சராக பதவியேற்ற மோகன் யாதவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies