சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசின் விருது!
Mar 15, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசின் விருது!

”தி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்” விருது!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் உள்ள சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு நாளை ‘ தி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் ‘ விருதினை வழங்கவுள்ளது.

இந்தியாவில் முதல் ரயில் ஆனது 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இயக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ரயில்வே வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் “அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்” என்ற விருது வழங்கப்பட்டுவருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகள் வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 69வது ரயில்வே வார விழாவில் வழங்கப்டுள்ளது. இதனை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்கவுள்ளார்.

இந்தாண்டு இந்திய அளவில் 100 பேர் இந்த விருதுக்கான தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தெற்கு ரயில்வேவில் 6 ஊழியர்கள், 3 அதிகாரிகள் தேர்வாகியுள்ளார்கள்.

இந்த விருதுக்காகத் தமிழகத்திலிருந்து மதுரையைச் சேர்ந்த வீரப்பெருமாள் தேர்வாகியுள்ளார். இவர் மதுரை கோட்டத்தில் மானாமதுரையில் பணியாற்றுபவர்.

இவர் மானாமதுரை தண்டவாளப் பாதையில் கண்காணிப்புப் பணி மேற்கொண்டிருந்தபோது, பழுதடைந்தநிலையில் தண்டவாளம் இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக தகவல் கொடுத்து சென்னை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்க உதவினார்.

அடுத்து ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் எர்ணாகுளம் விரைவுவண்டி ரயிலை இயக்கியபோது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த யானையைப் பார்த்த உடனே அவசரக்கால பிரேக்கைப் பயன்படுத்தி ரயில் தடம் புரள்வதைத் தவிர்த்ததுடன், யானையின் உயிரையும் காப்பாற்றினார்.

இதேபோல் டிக்கெட் ஆய்வாளர் டி.செல்வகுமார், ரயில்வே குற்ற வழக்குகளைத் திறமையோடு கையாண்ட ரயில்வே காவல் ஆய்வாளர் ஸ்ரீதேஷிதி மதுசூதன ரெட்டி, ஆவடி எமு கார் ஷெட் சீனியர் பிரிவு பொறியாளர் ஏ.செல்வராஜா, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை தலைமை செவிலியர் துர்காதேவி விஜயகுமார் விருதைப் பெறுகின்றனர்.

மேலும், முதுநிலைக் கோட்ட வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன், முதுநிலை கோட்டப் பொறியாளர் எஸ்.மயிலேறி, ரயில்வே தகவல் தொழில்நுட்ப அலுவலர் எஸ்.மாரியப்பன் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் சார்பாக அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதினைப் பெறுகின்றனர்.

Tags: Indian Railwayaward
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு!

Next Post

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies