சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசின் விருது!
Jul 23, 2025, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசின் விருது!

”தி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்” விருது!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் உள்ள சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு நாளை ‘ தி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் ‘ விருதினை வழங்கவுள்ளது.

இந்தியாவில் முதல் ரயில் ஆனது 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இயக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ரயில்வே வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் “அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்” என்ற விருது வழங்கப்பட்டுவருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகள் வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 69வது ரயில்வே வார விழாவில் வழங்கப்டுள்ளது. இதனை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்கவுள்ளார்.

இந்தாண்டு இந்திய அளவில் 100 பேர் இந்த விருதுக்கான தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தெற்கு ரயில்வேவில் 6 ஊழியர்கள், 3 அதிகாரிகள் தேர்வாகியுள்ளார்கள்.

இந்த விருதுக்காகத் தமிழகத்திலிருந்து மதுரையைச் சேர்ந்த வீரப்பெருமாள் தேர்வாகியுள்ளார். இவர் மதுரை கோட்டத்தில் மானாமதுரையில் பணியாற்றுபவர்.

இவர் மானாமதுரை தண்டவாளப் பாதையில் கண்காணிப்புப் பணி மேற்கொண்டிருந்தபோது, பழுதடைந்தநிலையில் தண்டவாளம் இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக தகவல் கொடுத்து சென்னை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்க உதவினார்.

அடுத்து ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் எர்ணாகுளம் விரைவுவண்டி ரயிலை இயக்கியபோது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த யானையைப் பார்த்த உடனே அவசரக்கால பிரேக்கைப் பயன்படுத்தி ரயில் தடம் புரள்வதைத் தவிர்த்ததுடன், யானையின் உயிரையும் காப்பாற்றினார்.

இதேபோல் டிக்கெட் ஆய்வாளர் டி.செல்வகுமார், ரயில்வே குற்ற வழக்குகளைத் திறமையோடு கையாண்ட ரயில்வே காவல் ஆய்வாளர் ஸ்ரீதேஷிதி மதுசூதன ரெட்டி, ஆவடி எமு கார் ஷெட் சீனியர் பிரிவு பொறியாளர் ஏ.செல்வராஜா, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை தலைமை செவிலியர் துர்காதேவி விஜயகுமார் விருதைப் பெறுகின்றனர்.

மேலும், முதுநிலைக் கோட்ட வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன், முதுநிலை கோட்டப் பொறியாளர் எஸ்.மயிலேறி, ரயில்வே தகவல் தொழில்நுட்ப அலுவலர் எஸ்.மாரியப்பன் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் சார்பாக அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதினைப் பெறுகின்றனர்.

Tags: Indian Railwayaward
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு!

Next Post

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள்!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies