சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசின் விருது!
Apr 29, 2026, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசின் விருது!

”தி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்” விருது!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் உள்ள சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு நாளை ‘ தி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் ‘ விருதினை வழங்கவுள்ளது.

இந்தியாவில் முதல் ரயில் ஆனது 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இயக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ரயில்வே வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் “அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்” என்ற விருது வழங்கப்பட்டுவருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகள் வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 69வது ரயில்வே வார விழாவில் வழங்கப்டுள்ளது. இதனை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்கவுள்ளார்.

இந்தாண்டு இந்திய அளவில் 100 பேர் இந்த விருதுக்கான தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தெற்கு ரயில்வேவில் 6 ஊழியர்கள், 3 அதிகாரிகள் தேர்வாகியுள்ளார்கள்.

இந்த விருதுக்காகத் தமிழகத்திலிருந்து மதுரையைச் சேர்ந்த வீரப்பெருமாள் தேர்வாகியுள்ளார். இவர் மதுரை கோட்டத்தில் மானாமதுரையில் பணியாற்றுபவர்.

இவர் மானாமதுரை தண்டவாளப் பாதையில் கண்காணிப்புப் பணி மேற்கொண்டிருந்தபோது, பழுதடைந்தநிலையில் தண்டவாளம் இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக தகவல் கொடுத்து சென்னை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்க உதவினார்.

அடுத்து ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் எர்ணாகுளம் விரைவுவண்டி ரயிலை இயக்கியபோது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த யானையைப் பார்த்த உடனே அவசரக்கால பிரேக்கைப் பயன்படுத்தி ரயில் தடம் புரள்வதைத் தவிர்த்ததுடன், யானையின் உயிரையும் காப்பாற்றினார்.

இதேபோல் டிக்கெட் ஆய்வாளர் டி.செல்வகுமார், ரயில்வே குற்ற வழக்குகளைத் திறமையோடு கையாண்ட ரயில்வே காவல் ஆய்வாளர் ஸ்ரீதேஷிதி மதுசூதன ரெட்டி, ஆவடி எமு கார் ஷெட் சீனியர் பிரிவு பொறியாளர் ஏ.செல்வராஜா, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை தலைமை செவிலியர் துர்காதேவி விஜயகுமார் விருதைப் பெறுகின்றனர்.

மேலும், முதுநிலைக் கோட்ட வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன், முதுநிலை கோட்டப் பொறியாளர் எஸ்.மயிலேறி, ரயில்வே தகவல் தொழில்நுட்ப அலுவலர் எஸ்.மாரியப்பன் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் சார்பாக அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதினைப் பெறுகின்றனர்.

Tags: Indian Railwayaward
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு!

Next Post

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள்!

Related News

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies