நாடாளுமன்ற அத்துமீறல்: 4 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்!
Aug 15, 2025, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: 4 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேர் மீதும், கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த சூழலில், கூட்டத்தொடரை பார்வையிடுவதற்காக வந்திருந்த 2 பேர், திடீரென எம்.பி.க்கள் இருந்த பகுதியில் குதித்தனர்.

கோஷ்ம் எழுப்பியவாறே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடியவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தி பிடித்தனர். அப்போது, கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை இருவரும் வீசினர். இதனால், எம்.பி.க்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர், இருவரும் அவைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல, இச்சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த இருவர், கோஷம் எழுப்பிவாறு மஞ்சள் நிற புகையைக் கக்கும் குண்டுகளை வீசினர்.

இதையடுத்து, அந்த இருவரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன், ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த நீலம் தேவி, மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த அமோல் ஷிண்டே என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கிரிமினல் சதி, அத்துமீறல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், இவர்களின் பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என்று டெல்லி போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, 4 பேரின் கல்விப் பின்னணி, கடந்த கால நடவடிக்கை, சமூக ஊடக செயல்பாடுகளையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

உபா சட்டம் என்பது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமாகும் (Unlawful Activities (Prevention) Act (UAPA). இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் 1967-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம்தான் உபா சட்டம். இச்சட்டத்தின் கீழ், எழுத்து மூலமாகவோ, பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக யார் செயல்பட்டாலும் வழக்குப் பதிவு செய்யலாம்.

Tags: ParliamentattackUnlawful Activities (Prevention) Act (UAPA)4 arrested
ShareTweetSendShare
Previous Post

போலந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டெஸ்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்க நடவடிக்கை! -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related News

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies