நாடாளுமன்ற அத்துமீறல்: 4 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்!
Jul 29, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: 4 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேர் மீதும், கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த சூழலில், கூட்டத்தொடரை பார்வையிடுவதற்காக வந்திருந்த 2 பேர், திடீரென எம்.பி.க்கள் இருந்த பகுதியில் குதித்தனர்.

கோஷ்ம் எழுப்பியவாறே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடியவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தி பிடித்தனர். அப்போது, கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை இருவரும் வீசினர். இதனால், எம்.பி.க்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர், இருவரும் அவைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல, இச்சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த இருவர், கோஷம் எழுப்பிவாறு மஞ்சள் நிற புகையைக் கக்கும் குண்டுகளை வீசினர்.

இதையடுத்து, அந்த இருவரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன், ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த நீலம் தேவி, மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த அமோல் ஷிண்டே என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கிரிமினல் சதி, அத்துமீறல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், இவர்களின் பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என்று டெல்லி போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, 4 பேரின் கல்விப் பின்னணி, கடந்த கால நடவடிக்கை, சமூக ஊடக செயல்பாடுகளையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

உபா சட்டம் என்பது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமாகும் (Unlawful Activities (Prevention) Act (UAPA). இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் 1967-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம்தான் உபா சட்டம். இச்சட்டத்தின் கீழ், எழுத்து மூலமாகவோ, பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக யார் செயல்பட்டாலும் வழக்குப் பதிவு செய்யலாம்.

Tags: ParliamentattackUnlawful Activities (Prevention) Act (UAPA)4 arrested
ShareTweetSendShare
Previous Post

போலந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டெஸ்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்க நடவடிக்கை! -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies