சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்தும், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்சிப்பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் இபிஎஸ் பேசியதாகக் கூறப்படுகிறது.
















