நாடாளுமன்றத்தை உளவு பார்த்த இளைஞர்கள்: திடுக் தகவல்கள் அம்பலம்!
Mar 15, 2026, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தை உளவு பார்த்த இளைஞர்கள்: திடுக் தகவல்கள் அம்பலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் சதித் திட்டத்தை அரங்கேறியவர்கள், தாக்குதலுக்கு முன்பு பக்காவாக உளவு பார்த்ததும், ஒரு மாதம் முன்பு நாடாளுமன்றத்தில் ஒத்திகை பார்த்ததும் தெரியவந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஒரு பெண் உட்பட 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இவர்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து டெல்லி போலீஸாரிடம் ஒப்படைந்தனர். இவர்கள் 4 பேர் மீது உபா சட்டம் பாய்ந்திருக்கும் நிலையில், அவர்களிடம் நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில், தாக்குதலுக்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு வந்து பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து உளவு பார்த்தது, 2001-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதல் நடந்த 22-ம் ஆண்டு நினைவு தினத்தில் இத்தாக்குதல் திட்டத்தை அரங்கேற்ற திட்டமிட்டது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது, உத்தரப் பிரதேசத்தின் லக்னெளவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த டி.மனோரஞ்சன், ஹரியானாவைச் சேர்ந்த நீலம் தேவி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமோல் ஷிண்டே, குருகிராம் நகரில் வசித்து வரும் விஷால், லலித் ஆகிய 6 பேரும் முகநூல் மூலம் நண்பர்களாகி இருக்கிறார்கள்.

“பகத்சிங் பேன் கிளப்” என்ற இணையதளம் மூலம் ஒருங்கிணைந்த இவர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மைசூரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது, 6 பேரும் ஒரே மனநிலையில் இருப்பது தெரியவந்தது. அரசுக்கு எதிராக அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று 6 பேரும் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதற்காக அடிக்கடி டெல்லியில் கூடி பேசியிருக்கிறார்கள். அப்போதுதான், நாடாளுமன்றத் தாக்குதல் தினமான டிசம்பர் 13-ம் தேதி மீண்டும் ஒரு புதுமையான தாக்குதலை அரங்கேற்ற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். எனவே, 6 பேரும் அடிக்கடி நாடாளுமன்றத்துக்கு வந்து உளவு பார்த்திருக்கிறார்கள்.

இவர்களில் சாகர் சர்மா மட்டும் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்துக்கு உள்ளே நுழைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்பதை நோட்டம் விட்டிருக்கிறார்.

அப்போது, நான்கு அடுக்கு பாதுகாப்பில் உடல் முழுவதையும் சோதனை செய்தாலும், காலில் அணிந்து செல்லும் ஷூவை கழற்றி ஆய்வு செய்யவில்லை என்பது தெரியவந்தது. எனவே, தாக்குதல் நடத்தும் பொருளை ஷூவுக்குள் மறைத்து எடுத்துச் செல்ல தீர்மானித்திருக்கிறார்கள்.

அதன்படி, 1,200 ரூபாய்க்கு புகைக் குண்டுகளை வாங்கி ஷூவுக்குள் மறைத்து எடுத்து வந்திருக்கிறார்கள். மேலும், தாக்குதலுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் இவர்கள் நாடாளுமன்றப் பகுதியில் ஒத்திகையும் நடத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் நாடாளுமன்றத் தாக்குதலை நன்கு திட்டமிட்டு நடத்தி இருப்பது தெரியவந்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இவர்கள் மட்டும்தான் சதித் திட்டத்தை செய்தார்களா அல்லது இவர்கள் ஒன்றிணைந்த முகநூல் குழுவில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

Tags: security breachParliament attack
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி தேவஸ்தான முடிவுக்கு நீதிமன்றம் தடை – முழு விவரம்

Next Post

பள்ளியில் ஓடு இடிந்து விழுந்து 5 குழந்தைகள் படுகாயம் – திருவள்ளூரில் பரபரப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies