திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மீது வழக்குப்பதிவு – ED அதிரடி!
Nov 17, 2025, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மீது வழக்குப்பதிவு – ED அதிரடி!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த வழக்கில், மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் பொது வினியோக கடைகளுக்கு வழங்குவதற்கு போலி நெல் கொள்முதல் செய்துள்ளார். இதுகுறித்து, கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த புகாரில், 32.44 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், அதில் 101 அசையா சொத்துகள் மற்றும் பல வங்கி கணக்குகளில் பணம் இருப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 12-ஆம் தேதி அரசு தரப்பு புகாரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேற்கு வங்க காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட, பல்வேறு எப்ஐஆர்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது. இதில் பல்வேறு அங்கீகரிக்கப்படாத தனியார் நபர்களிடம் போலியாக நெல் கொள்முதலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

என்பிஜி ரைஸ் மில் பிரைவேட் லிமிடேட் பிடிஎஸ் வினியோகஸ்தர்கள், பிடிஎஸ் டீலர்கள் மற்றும் பிற நபர்களுடன் கூட்டு சேர்ந்து பொது வினியோக அமைப்புக்கு வழங்க வேண்டிய மொத்த கோதுமை மாவில் 25.55 சதவீதம் முறைகேடு செய்துள்ளனர்.

மேலும், போலி விவசாயிகளின் பெயரில் நெல் கொள்முதல் செய்து மிகப் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில், என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் மிகப் பெரிய முறைகேடு செய்துள்ளார். இதன் மூலம் பல இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி உள்ளார்.

விசாரணையின் போது, முறைகேடு செய்து சேர்த்த 101 அசையா சொத்துக்கள் மற்றும் ரூபாய் 2 கோடியே 89 இலட்சம் வங்கி இருப்பு ஆகியவை டிசம்பர் 11-ஆம் தேதி தற்காலிகமாக இணைக்கப்பட்டது.

முன்னதாக, குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளில் இருந்த ரூபாய் 16 கோடியே 87 இலட்சம் முடக்கப்பட்டது. ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் பிஎம்எல்ஏ 2002 பிரிவு 19-இன் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

Tags: ED RAIDEnforcement department
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமராக்கள் பொருத்தம்!

Next Post

திருவையாறில் பந்தல்கால் நடும் விழா!

Related News

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

வங்க தேச முன்னாள்  பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies