திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மீது வழக்குப்பதிவு – ED அதிரடி!
Jan 14, 2026, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மீது வழக்குப்பதிவு – ED அதிரடி!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த வழக்கில், மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் பொது வினியோக கடைகளுக்கு வழங்குவதற்கு போலி நெல் கொள்முதல் செய்துள்ளார். இதுகுறித்து, கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த புகாரில், 32.44 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், அதில் 101 அசையா சொத்துகள் மற்றும் பல வங்கி கணக்குகளில் பணம் இருப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 12-ஆம் தேதி அரசு தரப்பு புகாரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேற்கு வங்க காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட, பல்வேறு எப்ஐஆர்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது. இதில் பல்வேறு அங்கீகரிக்கப்படாத தனியார் நபர்களிடம் போலியாக நெல் கொள்முதலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

என்பிஜி ரைஸ் மில் பிரைவேட் லிமிடேட் பிடிஎஸ் வினியோகஸ்தர்கள், பிடிஎஸ் டீலர்கள் மற்றும் பிற நபர்களுடன் கூட்டு சேர்ந்து பொது வினியோக அமைப்புக்கு வழங்க வேண்டிய மொத்த கோதுமை மாவில் 25.55 சதவீதம் முறைகேடு செய்துள்ளனர்.

மேலும், போலி விவசாயிகளின் பெயரில் நெல் கொள்முதல் செய்து மிகப் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில், என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் மிகப் பெரிய முறைகேடு செய்துள்ளார். இதன் மூலம் பல இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி உள்ளார்.

விசாரணையின் போது, முறைகேடு செய்து சேர்த்த 101 அசையா சொத்துக்கள் மற்றும் ரூபாய் 2 கோடியே 89 இலட்சம் வங்கி இருப்பு ஆகியவை டிசம்பர் 11-ஆம் தேதி தற்காலிகமாக இணைக்கப்பட்டது.

முன்னதாக, குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளில் இருந்த ரூபாய் 16 கோடியே 87 இலட்சம் முடக்கப்பட்டது. ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் பிஎம்எல்ஏ 2002 பிரிவு 19-இன் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

Tags: ED RAIDEnforcement department
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமராக்கள் பொருத்தம்!

Next Post

திருவையாறில் பந்தல்கால் நடும் விழா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies