இராமர் கோவிலுக்கு புதிய தலைமை அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலுக்கு புதிய தலைமை அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை!

அயோத்தி இராமர் கோவில் அறக்கட்டளை மறுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் தலைமை அர்ச்சகராக மோஹித் பாண்டே  நியமிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ராம் மந்திர் அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக. 3000 பேரிடம் இருந்த விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்களில் மோஹித் பாண்டேயின் பெயர் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

அதில் தலைமை அர்ச்சகராக உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசிக்கும் மோகித் பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

ஆனால் இதற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால், மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஸ்ரீ ராமஜென்மபூமி கோவிலுக்கு தலைமை அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றும், பொய்யான செய்திகளில் மக்கள் கவனம் செலுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ராமர் கோவிலின் தலைமை அர்ச்சராக சத்யேந்திர தாஸ் இருப்பதாகவும், புதிய அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தற்போது 21 நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 6 மாத கால பயிற்சிக்கு பின்னர் தலைமை பூசாரி தேர்வு செய்யப்படுவார் எனவும் அவர் கூறினார்.
கடந்த 32 ஆண்டுகளாக ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக சத்யேந்திர தாஸ் பணியாற்றி வருகிறார். தற்காலிக கோவிலில் ராம் லல்லாவை வழிபட்டு வருகிறார்.

1992 டிசம்பரில் பாபர் கட்டிடம் இடிக்கப்படுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்பட்டார். வழிபாடு செய்யும் போது, ஒரு நாள் ராம் லல்லாவின் கோயில் கட்டப்படும் என்று உணர்ந்ததாக அவர் கூறினார். சத்யேந்திர தாஸுக்கு தொடக்கத்தில் மாதம் ரூ.100 ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் அது ரூ.13,000 ஆக உயர்த்தப்பட்டது.

சத்யேந்திர தாஸ் பெயரை பாஜக முன்னாள் எம்பி வினய் கட்டியார் மற்றும் விஎச்பி முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் ஆகியோர் முடிவு செய்தனர். 1949 இல் ராம ஜென்மபூமியில் ராம் லல்லாவின் சிலையை நிறுவிய பைராகிகளில் அவரும் ஒருவர்.

1958 இல் வீட்டை விட்டு வெளியேறி, 1975 இல் ஆச்சார்யா பட்டம் பெற்றார், அடுத்த ஆண்டே அவர் சமஸ்கிருத ஆசிரியரானார். பாபர் இடிப்பு நேரத்தில் கூட, ராம் லல்லாவுடன் இருந்த அவர், அப்போதைய நிலையில் சிலையை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்.

Tags: Satyendra Dasayodhyaayodhya ramar templeRam Mandir trustMohit Pandeychief priest
ShareTweetSendShare
Previous Post

ஆசியான் – இந்தியா தினை திருவிழா தொடக்கம்!

Next Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டி20 – இந்தியா வெற்றி ! இரு அணிகளுக்கும் கோப்பை !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies