இராமர் கோவிலுக்கு புதிய தலைமை அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை!
Jul 5, 2025, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலுக்கு புதிய தலைமை அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை!

அயோத்தி இராமர் கோவில் அறக்கட்டளை மறுப்பு!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் தலைமை அர்ச்சகராக மோஹித் பாண்டே  நியமிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ராம் மந்திர் அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக. 3000 பேரிடம் இருந்த விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்களில் மோஹித் பாண்டேயின் பெயர் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

அதில் தலைமை அர்ச்சகராக உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசிக்கும் மோகித் பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

ஆனால் இதற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால், மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஸ்ரீ ராமஜென்மபூமி கோவிலுக்கு தலைமை அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றும், பொய்யான செய்திகளில் மக்கள் கவனம் செலுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ராமர் கோவிலின் தலைமை அர்ச்சராக சத்யேந்திர தாஸ் இருப்பதாகவும், புதிய அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தற்போது 21 நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 6 மாத கால பயிற்சிக்கு பின்னர் தலைமை பூசாரி தேர்வு செய்யப்படுவார் எனவும் அவர் கூறினார்.
கடந்த 32 ஆண்டுகளாக ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக சத்யேந்திர தாஸ் பணியாற்றி வருகிறார். தற்காலிக கோவிலில் ராம் லல்லாவை வழிபட்டு வருகிறார்.

1992 டிசம்பரில் பாபர் கட்டிடம் இடிக்கப்படுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்பட்டார். வழிபாடு செய்யும் போது, ஒரு நாள் ராம் லல்லாவின் கோயில் கட்டப்படும் என்று உணர்ந்ததாக அவர் கூறினார். சத்யேந்திர தாஸுக்கு தொடக்கத்தில் மாதம் ரூ.100 ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் அது ரூ.13,000 ஆக உயர்த்தப்பட்டது.

சத்யேந்திர தாஸ் பெயரை பாஜக முன்னாள் எம்பி வினய் கட்டியார் மற்றும் விஎச்பி முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் ஆகியோர் முடிவு செய்தனர். 1949 இல் ராம ஜென்மபூமியில் ராம் லல்லாவின் சிலையை நிறுவிய பைராகிகளில் அவரும் ஒருவர்.

1958 இல் வீட்டை விட்டு வெளியேறி, 1975 இல் ஆச்சார்யா பட்டம் பெற்றார், அடுத்த ஆண்டே அவர் சமஸ்கிருத ஆசிரியரானார். பாபர் இடிப்பு நேரத்தில் கூட, ராம் லல்லாவுடன் இருந்த அவர், அப்போதைய நிலையில் சிலையை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்.

Tags: ayodhyaayodhya ramar templeRam Mandir trustMohit Pandeychief priestSatyendra Das
ShareTweetSendShare
Previous Post

ஆசியான் – இந்தியா தினை திருவிழா தொடக்கம்!

Next Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டி20 – இந்தியா வெற்றி ! இரு அணிகளுக்கும் கோப்பை !

Related News

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேற்றம்!

டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டி – மேலாளர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முசிறி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சேதம் – பயணிகள் அச்சம்!

அரக்கோணத்தில் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் – போலீசார் விசாரணை!

வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!

சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்திய மக்கள்!

இரவு நேரத்தில் விசாரணைக்கு வருமாறு செல்போனில் அழைத்து டார்ச்சர் – போலீசார் மீது வெள்ளி பட்டறை உரிமையாளர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா?- திமுகவுக்கு விஜய் கேள்வி!

தொடரும் காவல்துறையின் அத்துமீறல் – இளைஞர் மீது தாக்குதல் நடத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு – பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி காவல்துறையில் புகார்!

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies