இராமர் கோவிலுக்கு புதிய தலைமை அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை!
Apr 29, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலுக்கு புதிய தலைமை அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை!

அயோத்தி இராமர் கோவில் அறக்கட்டளை மறுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் தலைமை அர்ச்சகராக மோஹித் பாண்டே  நியமிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ராம் மந்திர் அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக. 3000 பேரிடம் இருந்த விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்களில் மோஹித் பாண்டேயின் பெயர் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

அதில் தலைமை அர்ச்சகராக உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசிக்கும் மோகித் பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

ஆனால் இதற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால், மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஸ்ரீ ராமஜென்மபூமி கோவிலுக்கு தலைமை அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றும், பொய்யான செய்திகளில் மக்கள் கவனம் செலுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ராமர் கோவிலின் தலைமை அர்ச்சராக சத்யேந்திர தாஸ் இருப்பதாகவும், புதிய அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தற்போது 21 நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 6 மாத கால பயிற்சிக்கு பின்னர் தலைமை பூசாரி தேர்வு செய்யப்படுவார் எனவும் அவர் கூறினார்.
கடந்த 32 ஆண்டுகளாக ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக சத்யேந்திர தாஸ் பணியாற்றி வருகிறார். தற்காலிக கோவிலில் ராம் லல்லாவை வழிபட்டு வருகிறார்.

1992 டிசம்பரில் பாபர் கட்டிடம் இடிக்கப்படுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்பட்டார். வழிபாடு செய்யும் போது, ஒரு நாள் ராம் லல்லாவின் கோயில் கட்டப்படும் என்று உணர்ந்ததாக அவர் கூறினார். சத்யேந்திர தாஸுக்கு தொடக்கத்தில் மாதம் ரூ.100 ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் அது ரூ.13,000 ஆக உயர்த்தப்பட்டது.

சத்யேந்திர தாஸ் பெயரை பாஜக முன்னாள் எம்பி வினய் கட்டியார் மற்றும் விஎச்பி முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் ஆகியோர் முடிவு செய்தனர். 1949 இல் ராம ஜென்மபூமியில் ராம் லல்லாவின் சிலையை நிறுவிய பைராகிகளில் அவரும் ஒருவர்.

1958 இல் வீட்டை விட்டு வெளியேறி, 1975 இல் ஆச்சார்யா பட்டம் பெற்றார், அடுத்த ஆண்டே அவர் சமஸ்கிருத ஆசிரியரானார். பாபர் இடிப்பு நேரத்தில் கூட, ராம் லல்லாவுடன் இருந்த அவர், அப்போதைய நிலையில் சிலையை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்.

Tags: Satyendra Dasayodhyaayodhya ramar templeRam Mandir trustMohit Pandeychief priest
ShareTweetSendShare
Previous Post

ஆசியான் – இந்தியா தினை திருவிழா தொடக்கம்!

Next Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டி20 – இந்தியா வெற்றி ! இரு அணிகளுக்கும் கோப்பை !

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies