மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் இலங்கை வருகை: இந்தியா கடும் எதிர்ப்பு!
Jul 25, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் இலங்கை வருகை: இந்தியா கடும் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த மாதம் மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகை தரவிருக்கிறது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காக, சீன உளவுக் கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு வந்து செல்கின்றன. இவை அனைத்துமே உயர் தொழில்நுட்பம் கொண்ட உளவுக் கப்பல்களாகும். ஆகவே, இக்கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே வருவதாகக் குற்றம்சாட்டி, சீனக் கப்பல்கள் வருகைக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனாலும், சீன உளவுக் கப்பல்களின் வருகை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு சீனாவின் உளவுக் கப்பலான “யுவான் வாங் 5” இலங்கைக்கு வந்து, ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அதேபோல, ‘ஷி யான்-6’ என்கிற சீனக் கப்பல் கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்து, இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ‘ஷி யான்-6’ கப்பல் தனது ஆய்வுப் பணியை முடித்து விட்டு, கடந்த 2-ம் தேதி சிங்கப்பூர் சென்றது.

இந்த நிலையில், ஜனவரி மாதம் மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் இந்திய கடல் பகுதிக்கு வருகிறது. இக்கப்பல் ஜனவரி மாதம் 5-ம் தேதி முதல் மே மாதம் வரை 5-ம் தேதி வரை 3 மாதங்கள் இந்தியப் பெருங்கடலின் தெற்கு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்த உளவுக் கப்பல் 4,813 டன் எடை கொண்டது. இக்கப்பலில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வு கருவிகள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் இடம்பெற்று உள்ளன.

இக்கப்பலை இலங்கை மற்றும் மாலத்தீவு துறைமுகங்களில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே, மேற்கண்ட 2 நாடுகளிடமும் சீனா அனுமதி கேட்டிருக்கிறது. அதாவது, இலங்கையை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும், மாலத்தீவு அரசு தற்போது சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாலும் உளவுக் கப்பலை அனுப்பி இந்தியாவை உளவு பார்க்க 2 நாடுகளையும் சீனா பயன்படுத்துகிறது.

இதையடுத்து, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய 2 நாடுகளையும் மத்திய அரசு தொடர்பு கொண்டு, சீனக் கப்பலை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. எனினும், சீனாவின் உளவு கப்பலான ‘ஷியாங் யாங் ஹாங் 03’ தென் சீனக் கடல் பகுதியில் ஷியாமென் கடற்கரையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறது. 2 நாடுகளிடமும் அனுமதி பெற்ற பிறகு, அக்கப்பல் மலாக்கா வழியாக மாலத் தீவு மற்றும் இலங்கைக்கு பயணிக்கும் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, எதிர்கால கடற்படை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, சீனா ஏற்கெனவே கம்போடியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துறைமுகங்களை கையகப்படுத்தி இருக்கிறது. மேலும், இத்துறைமுகங்களில் முதலீடும் செய்திருக்கிறது. அந்த வகையில், இந்தியப் பெருங்கடல் முழுவதிலும் சீனா தனது தடத்தை விரிவுபடுத்த முயல்வதால், அதை தடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

Tags: srilankachina ship
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார் – தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

Next Post

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 14 எம்.பிக்களையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies