நாடாளுமன்ற அத்துமீறல்: முக்கிய ஆதாரங்களை எரித்து அழித்த லலித் ஜா!
Sep 9, 2025, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: முக்கிய ஆதாரங்களை எரித்து அழித்த லலித் ஜா!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த லலித் மோகன் ஜா, முக்கிய ஆதாரங்களை எரித்து அழித்து விட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் சாகர் சர்மா, மனோ ரஞ்சன் ஆகிய 2 இளைஞர்களும் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து மஞ்சள் நிற புகைக் குண்டுகளை வீசினர். பலத்த நான்கு அடுக்கு பாதுகாப்பை மீறி இவர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலுக்கு திட்டம் தீட்டிக்கொடுத்தது லலித் மோகன் ஜா என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இவர், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்தான் குற்றவாளிகள் தாக்குதலுக்கு பயன்படுத்திய பிரத்தியேக ஷூவை லக்னோ சென்று தயாரித்து வாங்கி வந்திருக்கிறார்.

இது தவிர, குற்றவாளிகள் குருக்கிராமில் தங்கி இருக்கவும், புகைக் குண்டு குப்பிகள் வாங்கவும் இவர்தான் ஏற்பாடு செய்திருக்கிறார். அதேபோல, நாடாளுமன்றத் தாக்குதல் நடந்தபோது இவரும் அங்குதான் இருந்திருக்கிறார். நீலம் தேவியும், அமோல் ஷிண்டேவும் நாடாளுமன்ற வளாகத்தில் புகைக் குண்டுகளை வீசியபோது, அதை லலித் மோகன் ஜா தனது செல்போனில் படம் பிடித்திருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கைதான குற்றவாளிகள் 4 பேரின் செல்போன்களும் லலித் மோகன் ஜாவிடம் இருப்பது தெரியவந்தது. எனவே, அவரைக் கைது செய்தால்தான் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதப்பட்டது. இதையடுத்து, அவரைப் பிடிக்க டெல்லி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில்தான், நேற்று இரவு லலித் மோகன் ஜா டெல்லி போலீஸாரிடம் சரணடைந்தார். பாத் ஆப் டியூட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்த அவரை, நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு பிரிவினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, லலித் மோகன் ஜாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் நடந்து முடிந்ததும் லலித் மோகன் ஜா பஸ்சில் ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றிருக்கிறார். அங்கு நகுர் என்கிற பகுதியில் தனது 2 நண்பர்களுடன் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.

ஆனால், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் போலீஸார் தன்னை நெருங்குவதை உணர்ந்ததாகத் தெரிகிறது. எனவே, அவர் டெல்லிக்கு திரும்பி வந்து சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, லலித் மோகன் ஜாவுக்கு உதவி செய்த 2 நண்பர்கள் பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதில், அவர்கள் மகேஷ், ராகேஷ் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கொல்கத்தாவில் லலித்துக்கு நெருக்கமானவர்கள் யார்? யார்? என்பது குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் முக்கியக் குற்றவாளி லலித் மோகன் ஜா, சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் மீது மிகுந்த பற்று கொண்டவர் என்பது தெரியவந்திருக்கிறது. பகத்சிங் போன்று நாட்டுக்காக புரட்சி செய்ய வேண்டும் என்று முகநூலில் பதிவுகளையும் வெளியிட்டு ஆதரவு பெற்றதாகவும் தெரியவந்திருக்கிறது.

மேலும், லலித் மோகன் ஜா என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்றில் பொதுச்செயலாளராக இருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த அமைப்பின் தலைவருக்கு அவர் நாடாளுமன்ற தாக்குதல் முடிந்ததும் தகவல்கள் அனுப்பி இருக்கிறார். அதில், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

ஆகவே, நாடாளுமன்றத் தாக்குதல் சதித் திட்டத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேசமயம், லலித் மோகன் ஜா ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றபோது மற்றவர்களின் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களையும் எடுத்துச் சென்றிருக்கிறார்.

அந்த ஆவணங்களை அவர் தீவைத்து எரித்திருக்கலாம் என்று விசாரணைக் குழுவினருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட சாகர் சர்மா, மனோ ரஞ்சன், நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய 4 பேரின் செல்போன்களை அவர் தீவைத்து முழுமையாக எரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றவாளிகளிடம் வேறு கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

Tags: evidenceParliament attackLalit Mohan Ja
ShareTweetSendShare
Previous Post

நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Next Post

செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies