அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், பெரு, உருகுவே சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது. கட்டாய வாக்களிப்பு முறை குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
கட்டாய வாக்களிப்பு என்பது தகுதியுள்ள குடிமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தற்போது சுமார் 22 நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் உள்ளது..
பெல்ஜியம் மிகவும் பழமையான கட்டாய வாக்களிக்கும் முறையைக் கொண்டுள்ளது.
1893 ஆம் ஆண்டு ஆண்களுக்கும், 1948 ஆம் ஆண்டு பெண்களுக்கும் கட்டாய வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெல்ஜியர்கள் மற்றும் பெல்ஜியம் அல்லாத வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளில் தங்களை முன்னிலைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
குறைந்தது நான்கு தேர்தல்களில் வாக்களிக்கத் தவறினால், 10 ஆண்டுகளுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும். பொதுத்துறையில் வேலை கிடைப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். மிகப்பெரிய நாடானு பிரேசிலில் கட்டாய வாக்களிப்பு முறை அமலில் உள்ள போதும், சுமார் 21% பேர் வாக்களிக்கவில்லை. இதனையடுத்து பலருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது.