ரோபோட்டிக் சுகாதார துறையில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை கணிசமாக அதிகரிக்கும்! - மன்சுக் மாண்டவியா
Jul 23, 2025, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோபோட்டிக் சுகாதார துறையில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை கணிசமாக அதிகரிக்கும்! – மன்சுக் மாண்டவியா

Web Desk by Web Desk
Dec 15, 2023, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அலக்நந்தா, ரோகிணி செக்டார் -16, வசந்த் விஹார் ஆகிய இடங்களில் மூன்று சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்களையும் மற்றும் என்.ஐ.டி.ஆர்.டி.யில் ஒரு ரோபோடிக் பிரிவையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

“341 சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்கள் 44 லட்சம் பயனாளிகளுக்கு சேவை செய்து வரும் நிலையில், தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் நிறுவனத்தில் மூன்று சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்கள் மற்றும் ரோபோட்டிக் பிரிவு தொடங்கப்படுவது அவர்களின் சுகாதார வசதிகளில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை கணிசமாக அதிகரிக்கும்” என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

அலக்நந்தா, ரோகிணி செக்டார் -16, வசந்த் விஹார் ஆகிய இடங்களில் மூன்று சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்களையும், என்.ஐ.டி மற்றும் ஆர்.டி.யில் ஒரு ரோபோட்டிக் பிரிவையும் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மத்திய வெளியுறவு மற்றும் சர்வதேச உறவுகள் துறை இணையமைச்சர் டாக்டர் மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய டாக்டர் மாண்டவியா, “அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக, சி.ஜி.எச்.எஸ்-ன் கீழ் வரும் நகரங்களின் எண்ணிக்கை 2014-ல் 25 ஆக இருந்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இந்த மையங்கள் விரைவில் இந்தியாவின் 100 நகரங்களை சென்றடையும்’’ என்று கூறினார்.

சி.ஜி.எச்.எஸ்ஸின் “உங்கள் உடல்நலம், எங்கள் குறிக்கோள்” என்ற இலக்கை மீண்டும் உறுதிப்படுத்தினார். “சி.ஜி.எச்.எஸ் பயனாளிகள் தங்கள் வசிப்பிடத்திற்கு மிக அருகில் சுகாதார சேவைகளைப் பெற முடியும் என்பதை உறுதி செய்வது எங்கள் குறிக்கோள், நாட்டின் உள்ள மூலைமுடுக்குகளுக்கு எல்லாம் வசதியை விரிவுபடுத்துகிறது” என்று கூறினார்.

“அறுவை சிகிச்சை தேவைப்படும் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உகந்த சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்காக ரோபோடிக் அறுவை சிகிச்சை அவர்களுக்கு சரியான கவனிப்பை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

“நாட்டின் கடைசி மைல் வரை அணுகக்கூடிய மற்றும் குறைந்தக் கட்டணத்தில் மருத்துவச் சேவைகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள் மற்றும் ஆரோக்கியமான தேசத்தின் அடித்தளம்” என்று குறிப்பிட்டார்.

ஆரோக்கியமான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய மற்றும் வளமான தேசத்தை வளர்ப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியவர் “குறைந்த விலையில் தரமான சுகாதார சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில், சுகாதார அமைச்சகம் பல அடுக்கு அணுகுமுறையை பின்பற்றியுள்ளத.

இதில் சுகாதார அமைச்சகம் தனியார் மருத்துவமனைகளில் சி.ஜி.எச்.எஸ் தொகுப்புகளின் கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது, இது பயனாளிகள் மற்றும் மருத்துவமனைகள் இருவருக்கும் பயனளிக்கும் தரமான சுகாதார சேவைகளை பயனாளிகள் அணுக உதவுகிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு விண்ணப்பித்ததைப் போலவே, இந்த நோக்கத்திற்காக தேசிய சுகாதார ஆணைய தளம் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த வசதி பயனாளிகளுக்கு முன்னுரிமை சிகிச்சையை வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கு வளங்களை வழங்கும் செயல்முறைகளை எளிதாக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

Tags: 341 CGHS Wellness Centers now across 80 cities.Inaugurated three CGHS Wellness Centres in Delhi.roboticsDr Mansukh Mandaviya
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Next Post

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Related News

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பழக்கங்கள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இத்தாலி : குகையில் 130 அடி ஆழத்தில் சிக்கிய ஆய்வாளர் மீட்பு!

திமுகவினர் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ளனர் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் 

சென்னை : 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தை!

தருமபுரி அருகே வீட்டின் மீது அரசு பேருந்து மோதி விபத்து – சிறுமி உயிரிழப்பு!

சீனா : வரவேற்பை பெற்ற சோலார் மின்விசிறி தொப்பிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிக வெள்ளையாக இல்லாததால் பட வாய்ப்பு பறிபோனது – வாணி கபூர்

டிஜிட்டல் உலகில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைத்துறை மேம்பட்டுள்ளது : நடிகர் கிங்காங்

மலையாள திரைப்படமான Ronth ஓடிடி தளத்தில் ரிலீஸ்!

சென்னை : தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டம்!

ஆர்டிக் பகுதியில் காலநிலை மாற்றம், மாசுபாட்டால் பாதிக்கப்படும் துருவக் கரடிகள்!

உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தமிழகம் 10ம் இடம் – மத்திய அரசு தகவல்!

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைவதை பார்த்து திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது : டிடிவி தினகரன்

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies