ரோபோட்டிக் சுகாதார துறையில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை கணிசமாக அதிகரிக்கும்! - மன்சுக் மாண்டவியா
Aug 12, 2026, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோபோட்டிக் சுகாதார துறையில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை கணிசமாக அதிகரிக்கும்! – மன்சுக் மாண்டவியா

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 04:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அலக்நந்தா, ரோகிணி செக்டார் -16, வசந்த் விஹார் ஆகிய இடங்களில் மூன்று சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்களையும் மற்றும் என்.ஐ.டி.ஆர்.டி.யில் ஒரு ரோபோடிக் பிரிவையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

“341 சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்கள் 44 லட்சம் பயனாளிகளுக்கு சேவை செய்து வரும் நிலையில், தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் நிறுவனத்தில் மூன்று சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்கள் மற்றும் ரோபோட்டிக் பிரிவு தொடங்கப்படுவது அவர்களின் சுகாதார வசதிகளில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை கணிசமாக அதிகரிக்கும்” என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

அலக்நந்தா, ரோகிணி செக்டார் -16, வசந்த் விஹார் ஆகிய இடங்களில் மூன்று சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்களையும், என்.ஐ.டி மற்றும் ஆர்.டி.யில் ஒரு ரோபோட்டிக் பிரிவையும் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மத்திய வெளியுறவு மற்றும் சர்வதேச உறவுகள் துறை இணையமைச்சர் டாக்டர் மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய டாக்டர் மாண்டவியா, “அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக, சி.ஜி.எச்.எஸ்-ன் கீழ் வரும் நகரங்களின் எண்ணிக்கை 2014-ல் 25 ஆக இருந்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இந்த மையங்கள் விரைவில் இந்தியாவின் 100 நகரங்களை சென்றடையும்’’ என்று கூறினார்.

சி.ஜி.எச்.எஸ்ஸின் “உங்கள் உடல்நலம், எங்கள் குறிக்கோள்” என்ற இலக்கை மீண்டும் உறுதிப்படுத்தினார். “சி.ஜி.எச்.எஸ் பயனாளிகள் தங்கள் வசிப்பிடத்திற்கு மிக அருகில் சுகாதார சேவைகளைப் பெற முடியும் என்பதை உறுதி செய்வது எங்கள் குறிக்கோள், நாட்டின் உள்ள மூலைமுடுக்குகளுக்கு எல்லாம் வசதியை விரிவுபடுத்துகிறது” என்று கூறினார்.

“அறுவை சிகிச்சை தேவைப்படும் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உகந்த சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்காக ரோபோடிக் அறுவை சிகிச்சை அவர்களுக்கு சரியான கவனிப்பை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

“நாட்டின் கடைசி மைல் வரை அணுகக்கூடிய மற்றும் குறைந்தக் கட்டணத்தில் மருத்துவச் சேவைகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள் மற்றும் ஆரோக்கியமான தேசத்தின் அடித்தளம்” என்று குறிப்பிட்டார்.

ஆரோக்கியமான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய மற்றும் வளமான தேசத்தை வளர்ப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியவர் “குறைந்த விலையில் தரமான சுகாதார சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில், சுகாதார அமைச்சகம் பல அடுக்கு அணுகுமுறையை பின்பற்றியுள்ளத.

இதில் சுகாதார அமைச்சகம் தனியார் மருத்துவமனைகளில் சி.ஜி.எச்.எஸ் தொகுப்புகளின் கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது, இது பயனாளிகள் மற்றும் மருத்துவமனைகள் இருவருக்கும் பயனளிக்கும் தரமான சுகாதார சேவைகளை பயனாளிகள் அணுக உதவுகிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு விண்ணப்பித்ததைப் போலவே, இந்த நோக்கத்திற்காக தேசிய சுகாதார ஆணைய தளம் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த வசதி பயனாளிகளுக்கு முன்னுரிமை சிகிச்சையை வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கு வளங்களை வழங்கும் செயல்முறைகளை எளிதாக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

Tags: roboticsDr Mansukh Mandaviya341 CGHS Wellness Centers now across 80 cities.Inaugurated three CGHS Wellness Centres in Delhi.
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Next Post

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies