எந்த சக்தியாலும் போரை தடுத்து நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர்!
Jun 3, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எந்த சக்தியாலும் போரை தடுத்து நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர்!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச அளவில் நிர்பந்தம் அதிகரித்து வரும் நிலையில், போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேல் நகருக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. 70 நாட்களை நெருங்கும் இப்போரில், காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. சுமார் 20,000 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். 50,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். தண்ணீர், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. மேலும், ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்திருக்கிறது.

ஆனால், சர்வதேச அழுத்தத்தையும் மீறி, போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள விடியோவில் பிரதமர் நெதன்யாகு பேசுகையில், “ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கான இந்தப் போர் இறுதி வரை தொடரும். இதை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

போரில் நமக்கு ஏற்படும் இழப்புகள் காரணமாக மட்டுமின்றி, சர்வதேச நிர்பந்தங்கள் காரணமாகவும் காஸாவில் சண்டை நிறுத்தப்படாது. அந்தப் போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இறுதி வெற்றி கிடைக்கும்வரை போர் தொடரும். அதைவிடக் குறைவான எந்தத் தீர்வும் ஏற்கப்படாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

Tags: Israel PMNetanyaguWARIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

மஹுவா மொய்த்ரா வழக்கு: ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

அமலாக்கத்துறையால் 2014 முதல் 1.16 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்!

Related News

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்ப் – ஜி ஜின்பிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies