எந்த சக்தியாலும் போரை தடுத்து நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர்!
Jul 25, 2025, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எந்த சக்தியாலும் போரை தடுத்து நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர்!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச அளவில் நிர்பந்தம் அதிகரித்து வரும் நிலையில், போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேல் நகருக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. 70 நாட்களை நெருங்கும் இப்போரில், காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. சுமார் 20,000 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். 50,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். தண்ணீர், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. மேலும், ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்திருக்கிறது.

ஆனால், சர்வதேச அழுத்தத்தையும் மீறி, போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள விடியோவில் பிரதமர் நெதன்யாகு பேசுகையில், “ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கான இந்தப் போர் இறுதி வரை தொடரும். இதை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

போரில் நமக்கு ஏற்படும் இழப்புகள் காரணமாக மட்டுமின்றி, சர்வதேச நிர்பந்தங்கள் காரணமாகவும் காஸாவில் சண்டை நிறுத்தப்படாது. அந்தப் போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இறுதி வெற்றி கிடைக்கும்வரை போர் தொடரும். அதைவிடக் குறைவான எந்தத் தீர்வும் ஏற்கப்படாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

Tags: NetanyaguWARIsraelHamasIsrael PM
ShareTweetSendShare
Previous Post

மஹுவா மொய்த்ரா வழக்கு: ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

அமலாக்கத்துறையால் 2014 முதல் 1.16 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies