ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை!
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில், ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று புதுடெல்லியை வந்தடைந்தார். அவருடன் அந்நாட்டின் மூத்த அமைச்சர்களும், உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் வந்தது. அவர்களுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாலை சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்தார். இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியா – ஓமன் மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த ஓமன் சுல்தானின் வழிகாட்டுதலை மதிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஓமன் சுல்தானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரும் ஓமன் சுல்தானை சந்திக்கிறார். பின்னர், அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் மதிய விருந்து அளிக்கப்படுகிறது.

இதன் பிறகு, டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தை சுல்தான் ஹைதம் பின் தாரிக் பார்வையிடுகிறார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் இந்தியாவுக்கான முதல் அரசுமுறைப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இது இந்தியாவுக்கும், ஓமனுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தவும்.

அதோடு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இப்பயணம் உதவும். மேலும், இந்தியாவுக்கும் ஓமன் சுல்தானகத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இது குறிக்கிறது. தவிர, ஓமன் சுல்தானின் இந்திய சுற்றுப் பயணமானது இருநாடுகளிடையேயான பிராந்திய நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வழிகோலும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதற்கு முன்பு, முன்னாள் இந்திய பிரதமர்கள் ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் ஓமனுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ல் ஓமன் பயணம் சென்றது இரு நாடுகளிடையேயான உறவில் மைல்கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: WelcomeOman SultanRashtrapati Bhavan
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடி, இராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Next Post

சாம்சங் தொலைப்பேசி பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies