வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள்: யு.ஜி.சி. எச்சரிக்கை!
Sep 10, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள்: யு.ஜி.சி. எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, எட்டெக் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தியாவில் செயல்படும் சில உயர்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்லூரிகளுடன் இணைந்து யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்படாத படிப்புகள் வழங்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சில எட்டெக் நிறுவனங்கள் செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில், சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆன்லைன் பட்டம் மற்றும் டிப்ளமோ திட்டங்களை வழங்குவதாக விளம்பரம் செய்து வருகின்றன.

இதையறிந்த பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) இதுபோன்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது என்று தெரிவித்திருப்பதோடு, இதுபோன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதுகுறித்து யு.ஜி.சி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைத்து நிறுவனங்களும் யு.ஜி.சி.யின் இந்தியாவில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைத்தல் மற்றும் இயக்குதல் விதிமுறைகள் 2023 மற்றும் யு.ஜி.சி.யின் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான கல்விக் கூட்டுறவை இணைந்து டுவின்னிங் ப்ரோகிராம், ஜாயிண்ட் டிகிரி, டூயல் டிகிரி ஒழுங்குமுறைகள் 2022 ஆகியவற்றின் கீழ் ஒப்புதல் பெற்ற பிறகுதான் படிப்புகளை தொடங்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட 2 விதிகளின்படி, பிரான்சைஸ் ஏற்பாட்டில் எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் பட்டப்படிப்புகளை வழங்க முடியாது. அப்படி வழங்கும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் செல்லுபடியாகாது. மேலும், இதுபோன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, மேற்கண்ட கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கல்லூரிகள் தொடங்குவதற்கான யு.ஜி.சி.-ன் விதிகளின்படி, சர்வதேச அளவில் முதல் 500 இடங்களை பிடித்துள்ள கல்லூரிகள் மட்டுமே இந்தியாவில் வளாகங்களை நிறுவ முடியும். மறுபுறம், ஒரு மாணவர் ஒரே பல்கலைக்கழகத்தில் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில், 2 முழுநேர படிப்புகளை தொடர அனுமதிக்கப்படுவார் என்று டூயல் டிகிரி வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. மாணவர் படிப்பின்போது, தான் பயிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் படிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: foreign universitiesonline degree coursesugc warns
ShareTweetSendShare
Previous Post

நமது படைகளின் தியாகம் தைரியத்தின் தூணாக இருக்கும் : அமித் ஷா 

Next Post

2026-ல் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: நிதி ஆயோக் மாஜி தலைவர்!

Related News

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies