மால்டா நாட்டு கப்பல் கடத்தல்: தடுத்து நிறுத்திய இந்திய கடற்படை!
Jan 14, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மால்டா நாட்டு கப்பல் கடத்தல்: தடுத்து நிறுத்திய இந்திய கடற்படை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டுக் கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அக்கப்பலைக் காப்பாற்ற இந்திய போர்க் கப்பல் விரைந்திருக்கிறது.

மால்டா நாட்டின் எம்.வி.ருயன் என்கிற சரக்குக் கப்பல் கடந்த 14-ம் தேதி அரபிக் கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அக்கப்பலை சோமாலியா நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். உடனே, அக்கப்பல் ஆபத்தில் இருப்பதாக இந்திய கடற்படைக்கு ஒரு பேரிடர் செய்தியை அனுப்பியது.

இதையடுத்து கடற்கொள்ளை தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அப்பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அக்கப்பலை இந்திய கடற்படை போர்க்கப்பல் இடைமறித்து நிறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “18 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஆபத்திற்கான எச்சரிக்கை மெசேஜ் அனுப்பியது. அக்கப்பலில் அடையாளம் தெரியாத 6 பேர் ஏறியதாக எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, அக்கப்பலை நோக்கி இந்தியக் கடற்படை ரோந்து விமானத்தை அனுப்பியது. தற்போது, அங்கு நிலவி வரும் சூழலை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். மேலும், இந்திய போர்க்கப்பல் ஒன்றும் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்ட அக்கப்பலை இடைமறித்திருக்கும் இந்திய போர்க்கப்பல், அங்கு நிலவி வரும் சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

அரபிக் கடல் பிராந்தியத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், முதலில் பதிலளிப்பது இந்தியக் கடற்படைதான். இந்த பிராந்தியத்தில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியக் கடற்படை உறுதியாக இருக்கிறது. அக்கப்பல் சோமாலியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டிருக்கிறது. எனினும், எம்.வி.ருயன் கப்பலின் கட்டுப்பாட்டை கப்பல் பணியாளர்கள் ஏற்கெனவே இழந்துவிட்டனர்” என்று தெரிவித்திருக்கிறது.

இந்த கடற்கொள்ளையில் சோமாலியா நாட்டின் கடற்கொள்ளையர்கள்தான் ஈடுபட்டிருக்கிறார்கள். சோமாலியாவுக்கு அருகிலுள்ள அரபிக் கடலில் இக்கடற்கொள்ளையர்கள் ஆக்டிவாக இருப்பதால் அப்பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இங்கிலாந்து அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு சோமாலியா கடற்கொள்ளையர்கள் மிகப் பெரிய கப்பலைக் கடத்துவது இதுவே முதல்முறை. 2017-ம் ஆண்டிலிருந்து சோமாலியா கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒழிக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்தன. இதன் பின்னரே, ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அடங்கி இருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

Tags: malta vesselhijackedindian navy warshipArabian sea
ShareTweetSendShare
Previous Post

காசி செல்லும் குழுவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Next Post

குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா காலமானார்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies