மால்டா நாட்டு கப்பல் கடத்தல்: தடுத்து நிறுத்திய இந்திய கடற்படை!
Jul 25, 2025, 08:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மால்டா நாட்டு கப்பல் கடத்தல்: தடுத்து நிறுத்திய இந்திய கடற்படை!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டுக் கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அக்கப்பலைக் காப்பாற்ற இந்திய போர்க் கப்பல் விரைந்திருக்கிறது.

மால்டா நாட்டின் எம்.வி.ருயன் என்கிற சரக்குக் கப்பல் கடந்த 14-ம் தேதி அரபிக் கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அக்கப்பலை சோமாலியா நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். உடனே, அக்கப்பல் ஆபத்தில் இருப்பதாக இந்திய கடற்படைக்கு ஒரு பேரிடர் செய்தியை அனுப்பியது.

இதையடுத்து கடற்கொள்ளை தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அப்பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அக்கப்பலை இந்திய கடற்படை போர்க்கப்பல் இடைமறித்து நிறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “18 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஆபத்திற்கான எச்சரிக்கை மெசேஜ் அனுப்பியது. அக்கப்பலில் அடையாளம் தெரியாத 6 பேர் ஏறியதாக எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, அக்கப்பலை நோக்கி இந்தியக் கடற்படை ரோந்து விமானத்தை அனுப்பியது. தற்போது, அங்கு நிலவி வரும் சூழலை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். மேலும், இந்திய போர்க்கப்பல் ஒன்றும் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்ட அக்கப்பலை இடைமறித்திருக்கும் இந்திய போர்க்கப்பல், அங்கு நிலவி வரும் சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

அரபிக் கடல் பிராந்தியத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், முதலில் பதிலளிப்பது இந்தியக் கடற்படைதான். இந்த பிராந்தியத்தில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியக் கடற்படை உறுதியாக இருக்கிறது. அக்கப்பல் சோமாலியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டிருக்கிறது. எனினும், எம்.வி.ருயன் கப்பலின் கட்டுப்பாட்டை கப்பல் பணியாளர்கள் ஏற்கெனவே இழந்துவிட்டனர்” என்று தெரிவித்திருக்கிறது.

இந்த கடற்கொள்ளையில் சோமாலியா நாட்டின் கடற்கொள்ளையர்கள்தான் ஈடுபட்டிருக்கிறார்கள். சோமாலியாவுக்கு அருகிலுள்ள அரபிக் கடலில் இக்கடற்கொள்ளையர்கள் ஆக்டிவாக இருப்பதால் அப்பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இங்கிலாந்து அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு சோமாலியா கடற்கொள்ளையர்கள் மிகப் பெரிய கப்பலைக் கடத்துவது இதுவே முதல்முறை. 2017-ம் ஆண்டிலிருந்து சோமாலியா கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒழிக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்தன. இதன் பின்னரே, ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அடங்கி இருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

Tags: Arabian seamalta vesselhijackedindian navy warship
ShareTweetSendShare
Previous Post

காசி செல்லும் குழுவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Next Post

குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா காலமானார்!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies