நாடாளுமன்ற அத்துமீறல்: தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது அம்பலம்!
Mar 15, 2026, 05:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது அம்பலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக போலீஸ் விசாரணையில் முக்கியக் குற்றவாளி லலித் ஜா கூறுகையில், முதலில் தீக்குளிக்க திட்டமிருந்ததாகவும், பிறகு திட்டத்தை மாற்றியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்துவரும் இக்கூட்டத்தொடரில், கடந்த 13-ம் தேதி  பாா்வையாளா் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் மக்களவைக்குள் குதித்து, கலர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

அதேபோல, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலம் தேவி, அமோல் ஷிண்டே, சாகா், மனோரஞ்சன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து உபா மற்றும் இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான லலித் ஜா புதுடெல்லி போலீஸிடம் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் தீக்குளிக்க முயன்றது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லலித் ஜா போலீஸில் அளித்த வாக்குமூலம் குறித்த தகவலில், “நானும், எனது கூட்டாளிகளும் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் தீக்குளிக்க திட்டமிட்டோம். தீத்தடுப்பு மருந்து தடவினால் அதிக தீக்காயம் ஏற்படாது என்று கருதினோம். ஆனால், அந்த மருந்து கிடைப்பதில் சிக்கல் இருந்தது. எனவே, அத்திட்டத்தை நாங்கள் கைவிட்டோம். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மொபைல் போன்களை அழித்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

எனினும், விசாரணையை திசை திருப்புவதற்காக லலித் ஜா, வாக்குமூலத்தை மாற்றி மாற்றிக் கூறி வருவதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். தவிர, லலித் ஜா விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும், அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொள்வதாகவும் போலீஸார் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

இதனிடையே, லலித் ஜாவின் தந்தை தேவானந்த் ஜா கூறுகையில், “சம்பவம் குறித்து நேற்றுதான் எங்களுக்குத் தெரிந்தது. அத்துமீறலில் எனது மகன் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பொறுப்பான குடிமகன். பட்டப்படிப்பை முடித்த அவர், கல்லூரியில் பல சான்றிதழ்களை பெற்றுள்ளார். எனது மகன் குற்றவாளி அல்ல. அருகில் உள்ளவர்களிடம் கேட்டுப் பாருங்கள். இத்தகைய சம்பவத்தில் ஈடுபடும் நபர் அல்ல. நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கூறியிருக்கிறா.

லலித் ஜாவின் தாயார் கூறுகையில், “எனது மகன் நல்லவர். என்ன நடந்தது என்றே புரியவில்லை. இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை” என்றார். இருவருமே “எங்களது மகன் அப்பாவி” என்று தெரிவித்திருக்கின்றனர்.

Tags: Parliament attacklalit jhaConfession
ShareTweetSendShare
Previous Post

உங்களுக்கு வெள்ள நிவாரண நிதி இல்லை – ரேஷன் கடையில் விரட்டப்பட்ட மக்கள்!

Next Post

ரோகித்துக்காக மனமுடைந்த சூர்யகுமார் யாதவ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies