நாடாளுமன்ற அத்துமீறல்: தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது அம்பலம்!
Jun 8, 2025, 03:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது அம்பலம்!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக போலீஸ் விசாரணையில் முக்கியக் குற்றவாளி லலித் ஜா கூறுகையில், முதலில் தீக்குளிக்க திட்டமிருந்ததாகவும், பிறகு திட்டத்தை மாற்றியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்துவரும் இக்கூட்டத்தொடரில், கடந்த 13-ம் தேதி  பாா்வையாளா் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் மக்களவைக்குள் குதித்து, கலர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

அதேபோல, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலம் தேவி, அமோல் ஷிண்டே, சாகா், மனோரஞ்சன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து உபா மற்றும் இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான லலித் ஜா புதுடெல்லி போலீஸிடம் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் தீக்குளிக்க முயன்றது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லலித் ஜா போலீஸில் அளித்த வாக்குமூலம் குறித்த தகவலில், “நானும், எனது கூட்டாளிகளும் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் தீக்குளிக்க திட்டமிட்டோம். தீத்தடுப்பு மருந்து தடவினால் அதிக தீக்காயம் ஏற்படாது என்று கருதினோம். ஆனால், அந்த மருந்து கிடைப்பதில் சிக்கல் இருந்தது. எனவே, அத்திட்டத்தை நாங்கள் கைவிட்டோம். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மொபைல் போன்களை அழித்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

எனினும், விசாரணையை திசை திருப்புவதற்காக லலித் ஜா, வாக்குமூலத்தை மாற்றி மாற்றிக் கூறி வருவதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். தவிர, லலித் ஜா விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும், அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொள்வதாகவும் போலீஸார் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

இதனிடையே, லலித் ஜாவின் தந்தை தேவானந்த் ஜா கூறுகையில், “சம்பவம் குறித்து நேற்றுதான் எங்களுக்குத் தெரிந்தது. அத்துமீறலில் எனது மகன் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பொறுப்பான குடிமகன். பட்டப்படிப்பை முடித்த அவர், கல்லூரியில் பல சான்றிதழ்களை பெற்றுள்ளார். எனது மகன் குற்றவாளி அல்ல. அருகில் உள்ளவர்களிடம் கேட்டுப் பாருங்கள். இத்தகைய சம்பவத்தில் ஈடுபடும் நபர் அல்ல. நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கூறியிருக்கிறா.

லலித் ஜாவின் தாயார் கூறுகையில், “எனது மகன் நல்லவர். என்ன நடந்தது என்றே புரியவில்லை. இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை” என்றார். இருவருமே “எங்களது மகன் அப்பாவி” என்று தெரிவித்திருக்கின்றனர்.

Tags: ConfessionParliament attacklalit jha
ShareTweetSendShare
Previous Post

உங்களுக்கு வெள்ள நிவாரண நிதி இல்லை – ரேஷன் கடையில் விரட்டப்பட்ட மக்கள்!

Next Post

ரோகித்துக்காக மனமுடைந்த சூர்யகுமார் யாதவ்!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies