நாடாளுமன்ற அத்துமீறல்: தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது அம்பலம்!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது அம்பலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 06:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக போலீஸ் விசாரணையில் முக்கியக் குற்றவாளி லலித் ஜா கூறுகையில், முதலில் தீக்குளிக்க திட்டமிருந்ததாகவும், பிறகு திட்டத்தை மாற்றியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்துவரும் இக்கூட்டத்தொடரில், கடந்த 13-ம் தேதி  பாா்வையாளா் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் மக்களவைக்குள் குதித்து, கலர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

அதேபோல, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலம் தேவி, அமோல் ஷிண்டே, சாகா், மனோரஞ்சன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து உபா மற்றும் இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான லலித் ஜா புதுடெல்லி போலீஸிடம் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் தீக்குளிக்க முயன்றது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லலித் ஜா போலீஸில் அளித்த வாக்குமூலம் குறித்த தகவலில், “நானும், எனது கூட்டாளிகளும் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் தீக்குளிக்க திட்டமிட்டோம். தீத்தடுப்பு மருந்து தடவினால் அதிக தீக்காயம் ஏற்படாது என்று கருதினோம். ஆனால், அந்த மருந்து கிடைப்பதில் சிக்கல் இருந்தது. எனவே, அத்திட்டத்தை நாங்கள் கைவிட்டோம். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மொபைல் போன்களை அழித்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

எனினும், விசாரணையை திசை திருப்புவதற்காக லலித் ஜா, வாக்குமூலத்தை மாற்றி மாற்றிக் கூறி வருவதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். தவிர, லலித் ஜா விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும், அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொள்வதாகவும் போலீஸார் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

இதனிடையே, லலித் ஜாவின் தந்தை தேவானந்த் ஜா கூறுகையில், “சம்பவம் குறித்து நேற்றுதான் எங்களுக்குத் தெரிந்தது. அத்துமீறலில் எனது மகன் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பொறுப்பான குடிமகன். பட்டப்படிப்பை முடித்த அவர், கல்லூரியில் பல சான்றிதழ்களை பெற்றுள்ளார். எனது மகன் குற்றவாளி அல்ல. அருகில் உள்ளவர்களிடம் கேட்டுப் பாருங்கள். இத்தகைய சம்பவத்தில் ஈடுபடும் நபர் அல்ல. நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கூறியிருக்கிறா.

லலித் ஜாவின் தாயார் கூறுகையில், “எனது மகன் நல்லவர். என்ன நடந்தது என்றே புரியவில்லை. இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை” என்றார். இருவருமே “எங்களது மகன் அப்பாவி” என்று தெரிவித்திருக்கின்றனர்.

Tags: Parliament attacklalit jhaConfession
Share
Tweet
SendShare
Previous Post

உங்களுக்கு வெள்ள நிவாரண நிதி இல்லை – ரேஷன் கடையில் விரட்டப்பட்ட மக்கள்!

Next Post

ரோகித்துக்காக மனமுடைந்த சூர்யகுமார் யாதவ்!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies