நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்!
Sep 9, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்!

எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதி இருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதிவரை கூட்டத்தொடரை நடத்தி திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனிடையே, கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் குதித்த 2 பேர், புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களிடம் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே, இச்சம்பவத்தை கண்டித்தும், பிரதமரும், அமித்ஷாவும் பதிலளிக்கக் கோரியும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் உட்பட 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், “நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காக்கவே எம்.பி.க்கள் சிலரை சஸ்பெண்ட் செய்தேன்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது. எம். பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை எனக்கு ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியது. எம்.பி.க்கள் அனைவரும் தேசத்திற்காக தங்களது கடமைகளை உண்மையாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க எம்.பி.க்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். புகைக் குப்பிகள் வீசப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை மக்களவையில் பகிரப்படும். இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது என்பதால்தான் எனது கவலையை அன்றே மக்களவையில் வெளிப்படுத்தினேன்.

மேலும், அன்றே அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கலந்துரையாடினேன். இச்சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு விசாரணையை தொடங்கி இருக்கிறது. விரைவில் அறிக்கை பகிரப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: om birlaletterLok SabaSpeakerMPs
ShareTweetSendShare
Previous Post

பொய்கள் வாக்குகளாக மாறாது : காங்கிரஸ் மீது ஜே.பி.நட்டா குற்றச்சாடடு!

Next Post

கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies