நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்!
Mar 15, 2026, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்!

எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதி இருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதிவரை கூட்டத்தொடரை நடத்தி திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனிடையே, கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் குதித்த 2 பேர், புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களிடம் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே, இச்சம்பவத்தை கண்டித்தும், பிரதமரும், அமித்ஷாவும் பதிலளிக்கக் கோரியும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் உட்பட 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், “நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காக்கவே எம்.பி.க்கள் சிலரை சஸ்பெண்ட் செய்தேன்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது. எம். பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை எனக்கு ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியது. எம்.பி.க்கள் அனைவரும் தேசத்திற்காக தங்களது கடமைகளை உண்மையாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க எம்.பி.க்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். புகைக் குப்பிகள் வீசப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை மக்களவையில் பகிரப்படும். இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது என்பதால்தான் எனது கவலையை அன்றே மக்களவையில் வெளிப்படுத்தினேன்.

மேலும், அன்றே அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கலந்துரையாடினேன். இச்சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு விசாரணையை தொடங்கி இருக்கிறது. விரைவில் அறிக்கை பகிரப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: om birlaletterLok SabaSpeakerMPs
ShareTweetSendShare
Previous Post

பொய்கள் வாக்குகளாக மாறாது : காங்கிரஸ் மீது ஜே.பி.நட்டா குற்றச்சாடடு!

Next Post

கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies