காசி தமிழ்ச் சங்கமம் 2.0 தொடங்கியது: பிரதமர் மோடி, யோகி பங்கேற்பு!
Mar 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசி தமிழ்ச் சங்கமம் 2.0 தொடங்கியது: பிரதமர் மோடி, யோகி பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசி தமிழ்ச் சங்கமம் 2.0 நிகழ்ச்சி கங்கைக் கரைகளில் ஒன்றான நமோ காட்டில் இன்று மாலை தொடங்கியது. நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரத்துக்கும் தமிழகத்துக்கும் இடையேயான தொன்மையான தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்முறையாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 1 மாதம் நீடித்த இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து 2,592 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததைத் தொடர்ந்து, 2-வது ஆண்டாக இந்தாண்டும் தொடர்கிறது.

இந்த ஆண்டுக்கான காசி தமிழ்ச் சங்கமம் 2.0 நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கியது. இந்நிகழ்ச்சியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி, மொத்தம் 13 நாட்கள் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து 1,400 பேர் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆன்மீகவாதிகள், விவசாயிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் 5 நாள் பயணத்தின்போது பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் மற்றும் அயோத்தி இராமர் கோவில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அதேபோல, காசி தமிழ்ச் சங்கமம் 2.0 நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை செல்லும் காசி தமிழ்ச் சங்கமம் புதிய விரைவு இரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் பதிப்பிக்கப்பட்ட மொழி பெயர்ப்பு நூல்களையும் பிரதமர் வெளியிட்டார். இதில், மாற்றுத்திறனாளிகள் படிக்கும் வகையில் பிரெய்லி முறையிலான திருக்குறள், சங்க இலக்கியம் மற்றும் இலக்கணங்களில் 46 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

இது தவிர, 10 இந்திய மொழிகள் மற்றும் 5 வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் நூல்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், வாரணாசி மற்றும் தமிழகத்துக்கு இடையிலான ஆன்மீகம், பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

தொடர்ந்து, தினசரி நடைபெறும் நிகழ்ச்சிகளில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 19, 20-ம் தேதிகளில் பங்கேற்கிறார்.

Tags: PM ModiInagurateskasi tamil sangamam 2.0
ShareTweetSendShare
Previous Post

கனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Next Post

தொடரும் மழை : பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies