என்.ஐ.ஏ. சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 8 பேர் கைது!
Jun 3, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.ஐ.ஏ. சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 8 பேர் கைது!

Web Desk by Web Desk
Dec 18, 2023, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த 8 பேரை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து மேம்பட்ட வெடிபொருட்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

நாட்டில், ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் நிறையப் பேர் தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் கிடைக்கின்றன. இதனடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் தீவிர சோதனை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. தீவிர சோதனை மேற்கொண்டது.

இச்சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், 9 வாள் மற்றும் கத்திகள், 2 லேப்டாப்கள், 6 ஹார்டு டிஸ்குகள், 3 சி.டி.க்கள், 39 செல்போன்கள், 10 புத்தகங்கள், 68 லட்சம் ரூபாய் ரொக்கம், ஹமாஸ் இயக்கத்தின் 51 கொடிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை முதல் கர்நாடகாவின் பல்லாரி, பெங்களூரு, அமராவதி, மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே, ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் பொகாரோ மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் 11 இடங்களிலும், ஜார்க்கண்டில் 4 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 3 இடங்களிலும், டெல்லியில் 1 இடத்திலும் என மொத்தம் 19 இடங்களில் இச்சோதனை நடந்தது.

இச்சோதனையில் கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட், கரி, துப்பாக்கி, சர்க்கரை மற்றும் எத்தனால் போன்ற வெடிக்கும் மூலப்பொருட்கள், கூர்மையான ஆயுதங்கள், கணக்கில் வராத பணம், பயங்கரவாத திட்டங்களை அம்பலப்படுத்தும் ஆவணங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் மினாஸ் உட்பட தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பல்லாரி தொகுதியைச் சேர்ந்த 8 செயல்பாட்டாளர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட அப்ளிகேஷன்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு செய்து தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்திருக்கிறது.

Tags: arrestednia raid
ShareTweetSendShare
Previous Post

மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையில் 45 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

Next Post

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்திய தமிழக இளம் வீரர்!

Related News

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்ப் – ஜி ஜின்பிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies