என்.ஐ.ஏ. சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 8 பேர் கைது!
Jul 31, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.ஐ.ஏ. சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 8 பேர் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 18, 2023, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த 8 பேரை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து மேம்பட்ட வெடிபொருட்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

நாட்டில், ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் நிறையப் பேர் தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் கிடைக்கின்றன. இதனடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் தீவிர சோதனை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. தீவிர சோதனை மேற்கொண்டது.

இச்சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், 9 வாள் மற்றும் கத்திகள், 2 லேப்டாப்கள், 6 ஹார்டு டிஸ்குகள், 3 சி.டி.க்கள், 39 செல்போன்கள், 10 புத்தகங்கள், 68 லட்சம் ரூபாய் ரொக்கம், ஹமாஸ் இயக்கத்தின் 51 கொடிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை முதல் கர்நாடகாவின் பல்லாரி, பெங்களூரு, அமராவதி, மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே, ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் பொகாரோ மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் 11 இடங்களிலும், ஜார்க்கண்டில் 4 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 3 இடங்களிலும், டெல்லியில் 1 இடத்திலும் என மொத்தம் 19 இடங்களில் இச்சோதனை நடந்தது.

இச்சோதனையில் கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட், கரி, துப்பாக்கி, சர்க்கரை மற்றும் எத்தனால் போன்ற வெடிக்கும் மூலப்பொருட்கள், கூர்மையான ஆயுதங்கள், கணக்கில் வராத பணம், பயங்கரவாத திட்டங்களை அம்பலப்படுத்தும் ஆவணங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் மினாஸ் உட்பட தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பல்லாரி தொகுதியைச் சேர்ந்த 8 செயல்பாட்டாளர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட அப்ளிகேஷன்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு செய்து தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்திருக்கிறது.

Tags: arrestednia raid
ShareTweetSendShare
Previous Post

மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையில் 45 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

Next Post

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்திய தமிழக இளம் வீரர்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies