ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடமில்லை: இத்தாலி பிரதமர் அதிரடி!
Jan 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடமில்லை: இத்தாலி பிரதமர் அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம். அதேபோல, ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடம் கிடையாது என்று இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

மத்தியத் தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் ஏராளமான அகதிகள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இவ்வாறு நுழையும் அகதிகளால் சமீப காலமாக உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே, சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க, அந்நாடுகளின் தலைவர்கள் பல்வேறு கட்டமாக சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அகதிகள் நுழைவதைக் கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி அமைப்பு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அல்பேனியா பிரதமர் எடி ரமா, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து அதிகளவில் அகதிகள் வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். மேலும், அகதிகளை அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்காக பொது நிதியை உருவாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், இக்கூட்டத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் பேசும் மெலோனி, “நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன்.

இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சௌதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சௌதி அரேபியா நாட்டில் மதக் கோட்பாடுகளை கைவிடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தக் கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும், மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்தும் இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. ஆகவே, ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே, போலந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்களும் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், தீவிரவாதிகளும் ஊடுருவுவதாக அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

Tags: IslamShariya lawGeorgia Melonyitaly pm
ShareTweetSendShare
Previous Post

ஊழல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்!

Next Post

நெல்லை, திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முடங்கியது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies