ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடமில்லை: இத்தாலி பிரதமர் அதிரடி!
Oct 3, 2025, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடமில்லை: இத்தாலி பிரதமர் அதிரடி!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம். அதேபோல, ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடம் கிடையாது என்று இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

மத்தியத் தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் ஏராளமான அகதிகள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இவ்வாறு நுழையும் அகதிகளால் சமீப காலமாக உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே, சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க, அந்நாடுகளின் தலைவர்கள் பல்வேறு கட்டமாக சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அகதிகள் நுழைவதைக் கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி அமைப்பு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அல்பேனியா பிரதமர் எடி ரமா, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து அதிகளவில் அகதிகள் வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். மேலும், அகதிகளை அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்காக பொது நிதியை உருவாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், இக்கூட்டத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் பேசும் மெலோனி, “நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன்.

இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சௌதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சௌதி அரேபியா நாட்டில் மதக் கோட்பாடுகளை கைவிடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தக் கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும், மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்தும் இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. ஆகவே, ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே, போலந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்களும் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், தீவிரவாதிகளும் ஊடுருவுவதாக அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

Tags: italy pmIslamShariya lawGeorgia Melony
ShareTweetSendShare
Previous Post

ஊழல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்!

Next Post

நெல்லை, திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முடங்கியது!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies