ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடமில்லை: இத்தாலி பிரதமர் அதிரடி!
Jul 29, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடமில்லை: இத்தாலி பிரதமர் அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம். அதேபோல, ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடம் கிடையாது என்று இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

மத்தியத் தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் ஏராளமான அகதிகள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இவ்வாறு நுழையும் அகதிகளால் சமீப காலமாக உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே, சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க, அந்நாடுகளின் தலைவர்கள் பல்வேறு கட்டமாக சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அகதிகள் நுழைவதைக் கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி அமைப்பு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அல்பேனியா பிரதமர் எடி ரமா, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து அதிகளவில் அகதிகள் வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். மேலும், அகதிகளை அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்காக பொது நிதியை உருவாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், இக்கூட்டத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் பேசும் மெலோனி, “நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன்.

இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சௌதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சௌதி அரேபியா நாட்டில் மதக் கோட்பாடுகளை கைவிடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தக் கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும், மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்தும் இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. ஆகவே, ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே, போலந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்களும் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், தீவிரவாதிகளும் ஊடுருவுவதாக அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

Tags: italy pmIslamShariya lawGeorgia Melony
ShareTweetSendShare
Previous Post

ஊழல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்!

Next Post

நெல்லை, திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முடங்கியது!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies