ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடமில்லை: இத்தாலி பிரதமர் அதிரடி!
Sep 12, 2026, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடமில்லை: இத்தாலி பிரதமர் அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 12:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம். அதேபோல, ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடம் கிடையாது என்று இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

மத்தியத் தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் ஏராளமான அகதிகள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இவ்வாறு நுழையும் அகதிகளால் சமீப காலமாக உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே, சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க, அந்நாடுகளின் தலைவர்கள் பல்வேறு கட்டமாக சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அகதிகள் நுழைவதைக் கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி அமைப்பு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அல்பேனியா பிரதமர் எடி ரமா, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து அதிகளவில் அகதிகள் வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். மேலும், அகதிகளை அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்காக பொது நிதியை உருவாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், இக்கூட்டத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் பேசும் மெலோனி, “நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன்.

இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சௌதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சௌதி அரேபியா நாட்டில் மதக் கோட்பாடுகளை கைவிடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தக் கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும், மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்தும் இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. ஆகவே, ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே, போலந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்களும் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், தீவிரவாதிகளும் ஊடுருவுவதாக அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

Tags: italy pmIslamShariya lawGeorgia Melony
Share
Tweet
SendShare
Previous Post

ஊழல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்!

Next Post

நெல்லை, திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முடங்கியது!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies