பொன்முடி குற்றவாளி : சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Jul 26, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி குற்றவாளி : சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2002 மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு முதலில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும், பின்பு 2015 -ல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஆனால், 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஏராளமான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், இந்த வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆயோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391-வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு நீதிபதி ஜெயந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது தவறு என்றும், 64.90 சதவீதம் சொத்து சேர்த்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது என்றும், தெரிவித்தார்.

எனவே, அமைச்சர் பொன்முடியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே, தண்டனை விவரங்கள் வரும் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், அன்றைய தினம், பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால், அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags: ponmudi land casePonmudichennai high courtminister ponmudi casechennai high court judgement
ShareTweetSendShare
Previous Post

ரோம் எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர் போல் முதல்வர் ஸ்டாலின்!

Next Post

கோவையில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies