பொன்முடி குற்றவாளி : சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Mar 15, 2026, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி குற்றவாளி : சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
Dec 19, 2023, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2002 மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு முதலில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும், பின்பு 2015 -ல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஆனால், 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஏராளமான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், இந்த வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆயோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391-வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு நீதிபதி ஜெயந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது தவறு என்றும், 64.90 சதவீதம் சொத்து சேர்த்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது என்றும், தெரிவித்தார்.

எனவே, அமைச்சர் பொன்முடியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே, தண்டனை விவரங்கள் வரும் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், அன்றைய தினம், பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால், அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags: ponmudi land casePonmudichennai high courtminister ponmudi casechennai high court judgement
ShareTweetSendShare
Previous Post

ரோம் எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர் போல் முதல்வர் ஸ்டாலின்!

Next Post

கோவையில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies