தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்! - தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்!
Jan 14, 2026, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்! – தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்தியும், புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கியும் நீர் சேமிப்பு திறனை அதிகப்படுத்த, கடந்த 2015 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கன மழையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தற்போது வரை பொது மக்கள் மீளாத் துயரத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை மாநகர், புறநகர் மக்கள் அடிக்கடி புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களால் பெரும் துயரங்களை எதிர்கொள்கின்றனர். புயல், மழை இயற்கை நிகழ்வு என்றாலும் மழை நீர் தேங்கி நிலைமை மோசமானதற்கு ஆறுகள், சிற்றோடைகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்கள், முகத்துவாரங்கள் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே இதற்கு காரணம்.

இயற்கை வளங்களை அழிவிலிருந்தும், மாசுபடாமலும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இதில் குடிமக்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான பாதிப்புகளுக்கு, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அரசுக்கு ஏற்பட்ட தோல்வியே காரணம்.

மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நிவாரணம், மறுவாழ்வு திட்டங்களுக்கு பெரும் தொகையை அரசு செலவிட்டு வருகிறது. ஆனாலும், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை.

நீர்நிலைகளின் பரப்பு குறைதல், நீர்வரத்து, வெளியேற்றும் கால்வாய்கள் காணாமல் போவது ஆகியவை, மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து தீர்ப்பாயம் கவலை கொள்கிறது.

* சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எத்தனை நீர்நிலைகள், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள், ஆற்றுப் புறம்போக்குகள் இருந்தன? இப்போது எத்தனை உள்ளன? அவற்றின் நீர் சேமிப்பு அளவு எவ்வளவு?

* நீர்நிலைகள், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள், ஆற்றுப் புறம்போக்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள், சட்ட விரோத கட்டுமானங்கள் எவ்வளவு?

* ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செயல் திட்டங்கள் என்ன? அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?

* சதுப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், அரசு கட்டடங்கள் எவ்வளவு?

* நீர்நிலைகளை பழைய நிலைக்கு மீட்டெடுப்பதற்காக வகுக்கப்பட்ட கொள்கைகள் என்ன?

* வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதுகாக்க வகுக்கப்பட்ட விதிமுறைகள் என்ன?

*ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்தியும், புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கியும் நீர் சேமிப்பு திறனை அதிகப்படுத்த, கடந்த 2015 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

* குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுக்க சி.எம்.டி.ஏ., நகர ஊரமைப்புத் துறையால் எடுக்கப்பட்ட திட்டமிடல், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்ன?

* தற்போதுள்ள நீர்நிலைகள், கைவிடப்பட்ட குவாரிகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியுமா?

* மழை, வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான தொழில்நுட்பத் தீர்வுகள் என்ன?

இவை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 1ல் நடக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags: floodNotice to the Chief Secretary! - South Zone Green Tribunal!
ShareTweetSendShare
Previous Post

வெள்ளம் பாதித்த பகுதிகள்! – இந்திய கடலோர காவல்படை மீட்பு பணிகளில் தீவிரம்!

Next Post

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபாரம்: ஐ.எம்.எஃப் பாராட்டு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies