பரிசீலிக்கத் தயார்: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில்!
Jul 23, 2025, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரிசீலிக்கத் தயார்: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில்!

Web Desk by Web Desk
Dec 20, 2023, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் கொலைச் சதி விவகாரத்தில், இந்திய அரசு அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு, ஆதாரங்களை கொடுத்தால் பரிசீலிக்கத் தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் தீவிரவாதியும், நீதிக்கான சீக்கியர் அமைப்பின் தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுனை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அந்த சதி முறியடிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.

மேலும், இந்த சதித் திட்டத்தில் இந்திய அதிகாரியுடன் இணைந்து ஒரு ஆளை கூலிக்கு அமர்த்தியதாக நிகில் குப்தா என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது அமெரிக்க அரசின் வழக்கறிஞர்கள் கூறுகையில், “நிகில் குப்தாவும், சிசி 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய அரசு அதிகாரியும் மே மாதம் முதல் தொலைப்பேசி வழியாகவும், மின்னணு தொடர்பு மூலமாகவும் பல முறை தகவல்கள் பரிமாறியுள்ளனர்.

அப்போது, சிசி1 கொலைக்கு திட்டமிடுமாறு நிகில் குப்தாவிடம் கேட்டிருக்கிறார். இதற்கு பதிலாக குப்தா மீது இந்தியாவில் உள்ள கிரிமினல் வழக்கு திரும்பப் பெறப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. சிசி1-ன் உத்தரவின் படி, பன்னுனைக் கொலைச் செய்வதற்காக தனக்கு வேண்டிய ஒருவரை நிகில் குப்தா அமர்த்தி இருக்கிறார். ஆனால், அவரால் நியமிக்கப்பட்டவர் அமெரிக்காவின் போதைத் தடுப்பு அமைப்பின் ரகசிய தகவலாளி” என்று தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “அமெரிக்கா உடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சில தகவல்களை அந்நாடு எங்களுக்கு வழங்கி இருக்கிறது. அத்தகவல்கள் கவலை அளிப்பவையாக இருக்கின்றன. ஏனெனில், அவை கடத்தல் மற்றும் பிற விஷயங்களுடன் தொடர்புடையவை. இது, நமது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கனடாவைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட ஆதாரங்களோ தகவல்களோ நமக்கு வழங்கப்படவில்லை. எனவே, கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவில்லை. இது 2 நாடுகளிடையே பாரபட்சமான அணுகுமுறை கிடையாது. ஆதாரங்கள் அளித்தவர்களையும்; அளிக்காதவர்களையும் ஒரே மாதிரியாகக் கருத முடியாது” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பிரிட்டன் பத்திரிகைக்கு பேட்டியளித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “எங்கள் நாட்டு குடிமகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரத்தைக் காட்டினால், அதனை ஆராய நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் ஆட்சியில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இது போன்ற சிறிய சம்பவங்கள் உலகின் பெரிய பொருளாதாரம், ஜனநாயகம் கொண்ட 2 நாடுகளின் உறவுகளை சீர்குலைக்க முடியாது. இந்த உறவினை வலுபடுத்த இரு நாடுகளிடமும் உறுதியான ஆதரவுகள் உள்ளன. இது முதிர்ச்சியான நிலையான உறவு என்பதின் தெளிவான அறிகுறி” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM ModiamericaallegationsRespond
ShareTweetSendShare
Previous Post

கொரோனா குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் பீதி அடையத் தேவையில்லை! – மன்சுக் மாண்டவியா

Next Post

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றது! – பூபேந்தர் யாதவ்

Related News

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies