மாநிலங்களவைத் தலைவரை சந்தித்து வேதனை தெரிவித்த மக்களவைத் தலைவர்!
Jan 14, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவைத் தலைவரை சந்தித்து வேதனை தெரிவித்த மக்களவைத் தலைவர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 20, 2023, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யால் அவமதிக்கப்பட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சந்தித்து வருத்தமும், வேதனையும் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த 2 இளைஞர்கள், புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் நடந்த இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக, எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, எதிர்கட்சிகளைச் சேர்ந்த 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை கண்டித்து அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெக்தீப் எப்படி பேசுவார், நடந்துகொள்வார் என்பது குறித்து இமிடேட் மற்றும் மிமிக்ரி செய்து கிண்டல் செய்தார். இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வீடியோ எடுத்தார்.

இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், இது வெட்கக்கேடான செயல் என்று குறிப்பிட்டார். ஜெக்தீப் தன்கருக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதை குறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் வருத்தமும், வேதனையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கரை சந்தித்து தனது வருத்தத்தையும், வேதனையும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டிருக்கும் பதிவில், “நாடாளுமன்ற வளாகத்தில் மாண்புமிகு எம்.பி.க்கள் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரின் அரசியல் சாசன அலுவலகத்தை இழிவுபடுத்தும் வகையிலான கடுமையான தவறுகள் குறித்து எனது ஆழ்ந்த கவலைகளையும், வேதனைகளையும் தெரிவித்தேன். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட யாரும் எம்.பி.க்களின் இத்தகைய செயலை ஒருபோதும் பாராட்ட மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Rajya Sabametom birlaLok SabaJagdeep DhankarSpeaker
ShareTweetSendShare
Previous Post

மின்னணு பணப்பரிவர்த்தனை ரூ.13,462 கோடியாக அதிகரிப்பு! – மத்திய அரசு

Next Post

ஐ.டி. ரெய்டு அனுப்புவேன்னு பயப்படுறீங்களா? வைரலாகும் பிரதமர் மோடியின் வீடியோ!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies