மாநிலங்களவைத் தலைவரை சந்தித்து வேதனை தெரிவித்த மக்களவைத் தலைவர்!
Oct 25, 2025, 11:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவைத் தலைவரை சந்தித்து வேதனை தெரிவித்த மக்களவைத் தலைவர்!

Web Desk by Web Desk
Dec 20, 2023, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யால் அவமதிக்கப்பட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சந்தித்து வருத்தமும், வேதனையும் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த 2 இளைஞர்கள், புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் நடந்த இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக, எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, எதிர்கட்சிகளைச் சேர்ந்த 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை கண்டித்து அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெக்தீப் எப்படி பேசுவார், நடந்துகொள்வார் என்பது குறித்து இமிடேட் மற்றும் மிமிக்ரி செய்து கிண்டல் செய்தார். இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வீடியோ எடுத்தார்.

இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், இது வெட்கக்கேடான செயல் என்று குறிப்பிட்டார். ஜெக்தீப் தன்கருக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதை குறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் வருத்தமும், வேதனையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கரை சந்தித்து தனது வருத்தத்தையும், வேதனையும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டிருக்கும் பதிவில், “நாடாளுமன்ற வளாகத்தில் மாண்புமிகு எம்.பி.க்கள் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரின் அரசியல் சாசன அலுவலகத்தை இழிவுபடுத்தும் வகையிலான கடுமையான தவறுகள் குறித்து எனது ஆழ்ந்த கவலைகளையும், வேதனைகளையும் தெரிவித்தேன். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட யாரும் எம்.பி.க்களின் இத்தகைய செயலை ஒருபோதும் பாராட்ட மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Rajya Sabametom birlaLok SabaJagdeep DhankarSpeaker
ShareTweetSendShare
Previous Post

மின்னணு பணப்பரிவர்த்தனை ரூ.13,462 கோடியாக அதிகரிப்பு! – மத்திய அரசு

Next Post

ஐ.டி. ரெய்டு அனுப்புவேன்னு பயப்படுறீங்களா? வைரலாகும் பிரதமர் மோடியின் வீடியோ!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies