மாநிலங்களவைத் தலைவரை சந்தித்து வேதனை தெரிவித்த மக்களவைத் தலைவர்!
Jun 14, 2026, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவைத் தலைவரை சந்தித்து வேதனை தெரிவித்த மக்களவைத் தலைவர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 20, 2023, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யால் அவமதிக்கப்பட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சந்தித்து வருத்தமும், வேதனையும் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த 2 இளைஞர்கள், புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் நடந்த இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக, எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, எதிர்கட்சிகளைச் சேர்ந்த 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை கண்டித்து அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெக்தீப் எப்படி பேசுவார், நடந்துகொள்வார் என்பது குறித்து இமிடேட் மற்றும் மிமிக்ரி செய்து கிண்டல் செய்தார். இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வீடியோ எடுத்தார்.

இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், இது வெட்கக்கேடான செயல் என்று குறிப்பிட்டார். ஜெக்தீப் தன்கருக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதை குறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் வருத்தமும், வேதனையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கரை சந்தித்து தனது வருத்தத்தையும், வேதனையும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டிருக்கும் பதிவில், “நாடாளுமன்ற வளாகத்தில் மாண்புமிகு எம்.பி.க்கள் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரின் அரசியல் சாசன அலுவலகத்தை இழிவுபடுத்தும் வகையிலான கடுமையான தவறுகள் குறித்து எனது ஆழ்ந்த கவலைகளையும், வேதனைகளையும் தெரிவித்தேன். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட யாரும் எம்.பி.க்களின் இத்தகைய செயலை ஒருபோதும் பாராட்ட மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Rajya Sabametom birlaLok SabaJagdeep DhankarSpeaker
ShareTweetSendShare
Previous Post

மின்னணு பணப்பரிவர்த்தனை ரூ.13,462 கோடியாக அதிகரிப்பு! – மத்திய அரசு

Next Post

ஐ.டி. ரெய்டு அனுப்புவேன்னு பயப்படுறீங்களா? வைரலாகும் பிரதமர் மோடியின் வீடியோ!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies