காங்கிரஸ் கட்சியிடம் சமோசாவுக்குக் கூட காசு இல்லை: ஜனதா தள எம்.பி. புலம்பல்!
Mar 15, 2026, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சியிடம் சமோசாவுக்குக் கூட காசு இல்லை: ஜனதா தள எம்.பி. புலம்பல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியிடம் சமோசாவுக்குக் கூட காசு இல்லை. எங்களிடம் நிதி கேட்கிறது. கடந்த முறை கூட்டத்தின்போது டீயும் சமோசாவும் கொடுத்தார்கள். தற்போது டீயும் பிஸ்கட்டும் கொடுக்கிறார்கள் என்று ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி. பிந்து புலம்பி இருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக, எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து “இண்டி” கூட்டணியை அமைத்திருக்கின்றன. இக்கூட்டத்தின் முதல் கூட்டம் பீகார் மாநிலத்தில் நடந்தது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு, மும்பையில் 2 மற்றும் 3-வது கூட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், இண்டி கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் கடந்த 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்க முடியாத சூழல் நிலவியது. எனவே, கூட்டம் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 19-ம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்மொழிந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு டீயும் பிஸ்கட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, தேர்தலுக்கு நிதி திரட்டும் வகையில், காங்கிரஸ் கட்சி 138-வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், 138 ரூபாய், 1,380 ரூபாய், 13,800 ரூபாய் நிதி வழங்கும்படி கூறியிருக்கிறது.

இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியிடம் சமோசாவுக்குக் கூட காசு இல்லை. தேர்தல் செலவை எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ என்று கூட்டணிக் கட்சியான பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் புலம்பித் தள்ளி இருக்கிறார்.

இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. சுனில் குமார் பிந்து கூறுகையில், “இண்டி கூட்டத்தில் அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் உறுதியான முடிவை எதிர்பார்த்தனர். ஆனால், இந்தக் கூட்டமும் தீர்க்கமான முடிவுகள் இல்லாமல் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

அதேசமயம், முன்பெல்லாம் கூட்டணிக் கட்சிக் கூட்டங்களில் டீயும், சமோசாவும் தருவார்கள். ஆனால், நடந்து முடிந்த கூட்டத்தில் வெறும் டீயும் பிஸ்கட்டும் மட்டுமே தந்தார்கள். அதோடு, தாங்கள் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதாகக் கூறி, தங்களுக்கு ஆதரவாக 138, 1,380 அல்லது 13,800 ரூபாய் நன்கொடை வழங்குமாறு காங்கிரஸ் கட்சி அனைவரையும் கேட்டுக் கொண்டது” என்று புலம்பித் தள்ளி இருக்கிறார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.யின் இந்த பேச்சு, காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்வதுபோல அமைந்திருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதேசமயம், இண்டி கூட்டணியிலிருந்து நிதீஷ் குமார் விலகப்போவதாக அரசல் புரசலாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், அக்கட்சியின் எம்.பி. இப்படி கிண்டல் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: meetingINDI AllianceSamosaJDU MP
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: முக்கிய நிகழ்ச்சிகள் வெளியீடு!

Next Post

ம.பி. சபாநாயகராக நரேந்திர சிங் தோமர் தேர்வு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies