மத்திய அரசு, தமிழகதத்திற்கு நிவாரணம் வழங்குவதை எந்த வகையிலும் தாமதப்படுத்தவோ, மறந்துவிடவோ இல்லை! - நிர்மலா சீதாராமன்
Oct 3, 2025, 09:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு, தமிழகதத்திற்கு நிவாரணம் வழங்குவதை எந்த வகையிலும் தாமதப்படுத்தவோ, மறந்துவிடவோ இல்லை! – நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Dec 20, 2023, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் மத்திய பங்கின் இரண்டாவது தவணை ரூ. 450 கோடியும் டிசம்பர் 12ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

தமிழ்நாடு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து டிசம்பர் 18 ஆம் தேதி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் மொத்தம் 10 மீட்புக் குழுக்கள் தென் தமிழகத்திற்காக அனுப்பப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 8 குழுக்கள், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 2 குழுக்கள் . சென்னை மண்டல மீட்பு மையத்தில் ஒரு குழு, இப்போதும் அரக்கோணம் தலைமையகத்தில் இரண்டு அணிகள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு மொத்தம் 13 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தமிழகத்தில் உள்ளன. 8 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டு, கூடுதல் ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்திய கடலோர காவல்படையின் ஒரு கப்பல் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களுடன், அங்கு நிலைநிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறது.

19 மீட்புக் குழுக்கள் அந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ளன. இதில் ராணுவம் -2, கடலோர காவல்படை – 7, தேசிய பேரிடர் மீட்புப் படை -10. மேலும், 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டிற்கான மாநில பேரிடர் மீட்பு நிதி (SDRF) ரூ. 1,200 கோடி, இதில் ரூ.900 கோடி மத்திய அரசின் பங்காகும். மாநில அரசின் அறிக்கையின்படி, ஏப்ரல் 1, 2023 நிலவரப்படி, மாநில பேரிடர் மீட்பு நிதி கணக்கில் உள்ள இருப்பு ரூ.813.15 கோடி. நடப்பு 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் மீட்பு நிதியின் மத்திய பங்கான ரூ.450 கோடியின் முதல் தவணை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தவணையாக ரூ. 450 கோடியும் 2023 டிசம்பர் 12ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு , சரியான நேரத்தில் நிவாரணம் வழங்குவதை எந்த வகையிலும் தாமதப்படுத்தவோ அல்லது மறந்துவிடவோ இல்லை எனத் தெரிவித்தார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

கடலோர காவல்படைக்கு ரோந்து கப்பல்கள் ரூ.1,614.89 கோடிக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்!

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: முக்கிய நிகழ்ச்சிகள் வெளியீடு!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies