பெங்களூரு அணிக்கு உதவி செய்வீர்களா? தோனியிடம் ரசிகர் கேட்ட கேள்வி!
Jan 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு அணிக்கு உதவி செய்வீர்களா? தோனியிடம் ரசிகர் கேட்ட கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியிடம் பெங்களூரு அணி குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் அளித்த பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்திய பிரீமியர் லீக் தொடர் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிறது, இந்த 16 ஆண்டுகளும் போட்டியில் விளையாடி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத அணி என்றால் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் அணிகள் என்றே சொல்லலாம்.

இதில் அனைவரிடமும் கவனம் பெற்ற அணி என்றால், அது பெங்களூர் அணி ஏனெனில் பெங்களூரு அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி விளையாடுகிறார். அதுமட்டும் மின்று கிறிஸ் கெயில் இந்த அணியில் முன்னாள் வீரராக விளையாடி வந்தார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்களை குவித்த அணியாகவும் இதுவரை குறைந்த ரன்களை எடுத்த அணியாகவும் திகழ்வது பெங்களூரு அணி தான்.

ஒரு தொடர் முழுக்க சிறப்பாக விளையாடி இறுதியில் வெற்றி வாய்ப்பை தவறவிடும் அணி தான் பெங்களூரு. எவ்வளவு முயற்சி செய்து இந்த 16 வருடங்களில் பெங்களூரு அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்துள்ளது. இந்த சமயத்தில் ரசிகர்கள் ஒருவர் தோனியிடம் கேட்ட கேள்வி இணையத்தில் வரைலாகி வருகிறது.

அதில் ரசிகர், ” நான் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகர், நீங்கள் ஐந்து கோப்பையை சிஎஸ்கே அணிக்காக வென்று கொடுத்து விட்டீர்கள், ஆனால் எங்களால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. ஏன் நீங்கள் ஆர்சிபி அணிக்கு வந்து கோப்பையை வெல்வதற்கு உதவி செய்யக்கூடாது” என்று கேள்வி கேட்டார்.

அதற்கு தோனி, ” ஆர்சிபி என்பது மிகவும் நல்ல அணி. ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை உங்களுடைய திட்டப்படி எப்போதுமே சரியாக நடைபெறாது. ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் அனைத்து 10 அணிகளுமே பலம் வாய்ந்த வீரர்களை தான் தேர்வு செய்கிறார்கள். பிரச்சனையே சில வீரர்கள் சில போட்டிகளில் காயம் அடைந்து விளையாட முடியாத சூழல் ஏற்படுகிறது. இதன் மூலம் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.

நான் ஏற்கெனவே சொன்னது போல ஆர்சிபி நல்ல அணி தான். ஆனால் எங்கள் அணியிலுமே தற்போது பிரச்சனை இருக்கிறது. நான் என் அணி குறித்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கிறது. இதில் நான் எப்படி மற்ற அணிக்கு வந்து உதவ முடியும். நான் ஆர்சிபிக்கு வந்து உதவினேன் என்றால் எங்கள் அணி ரசிகர்கள் எவ்வாறு நினைப்பார்கள். அவர்களுடைய மனது வருத்தப்படும் அல்லவா?

அவர்கள் இடத்தில் நீங்கள் இருந்தாலும் எப்படி உணர்வீர்கள். எனவே அது முடியாத காரியம். ஐபிஎல் தொடரில் விளையாட போகும் 10 அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன் என்று தோனி பதில் அளித்தார்.

தோனியின் இந்த பதிலைக் கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள். இந்த பதில் மூலம் தோனி சிஎஸ்கேவில் தான் எதிர்காலத்தில் தொடரப் போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags: iplms dhoni crickett20ipl 2024
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

Next Post

கேரளாவில் மேலும் 300 பேருக்கு கொரோனா!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies