பெங்களூரு அணிக்கு உதவி செய்வீர்களா? தோனியிடம் ரசிகர் கேட்ட கேள்வி!
Jul 23, 2025, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு அணிக்கு உதவி செய்வீர்களா? தோனியிடம் ரசிகர் கேட்ட கேள்வி!

Web Desk by Web Desk
Dec 21, 2023, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியிடம் பெங்களூரு அணி குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் அளித்த பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்திய பிரீமியர் லீக் தொடர் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிறது, இந்த 16 ஆண்டுகளும் போட்டியில் விளையாடி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத அணி என்றால் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் அணிகள் என்றே சொல்லலாம்.

இதில் அனைவரிடமும் கவனம் பெற்ற அணி என்றால், அது பெங்களூர் அணி ஏனெனில் பெங்களூரு அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி விளையாடுகிறார். அதுமட்டும் மின்று கிறிஸ் கெயில் இந்த அணியில் முன்னாள் வீரராக விளையாடி வந்தார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்களை குவித்த அணியாகவும் இதுவரை குறைந்த ரன்களை எடுத்த அணியாகவும் திகழ்வது பெங்களூரு அணி தான்.

ஒரு தொடர் முழுக்க சிறப்பாக விளையாடி இறுதியில் வெற்றி வாய்ப்பை தவறவிடும் அணி தான் பெங்களூரு. எவ்வளவு முயற்சி செய்து இந்த 16 வருடங்களில் பெங்களூரு அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்துள்ளது. இந்த சமயத்தில் ரசிகர்கள் ஒருவர் தோனியிடம் கேட்ட கேள்வி இணையத்தில் வரைலாகி வருகிறது.

அதில் ரசிகர், ” நான் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகர், நீங்கள் ஐந்து கோப்பையை சிஎஸ்கே அணிக்காக வென்று கொடுத்து விட்டீர்கள், ஆனால் எங்களால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. ஏன் நீங்கள் ஆர்சிபி அணிக்கு வந்து கோப்பையை வெல்வதற்கு உதவி செய்யக்கூடாது” என்று கேள்வி கேட்டார்.

அதற்கு தோனி, ” ஆர்சிபி என்பது மிகவும் நல்ல அணி. ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை உங்களுடைய திட்டப்படி எப்போதுமே சரியாக நடைபெறாது. ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் அனைத்து 10 அணிகளுமே பலம் வாய்ந்த வீரர்களை தான் தேர்வு செய்கிறார்கள். பிரச்சனையே சில வீரர்கள் சில போட்டிகளில் காயம் அடைந்து விளையாட முடியாத சூழல் ஏற்படுகிறது. இதன் மூலம் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.

நான் ஏற்கெனவே சொன்னது போல ஆர்சிபி நல்ல அணி தான். ஆனால் எங்கள் அணியிலுமே தற்போது பிரச்சனை இருக்கிறது. நான் என் அணி குறித்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கிறது. இதில் நான் எப்படி மற்ற அணிக்கு வந்து உதவ முடியும். நான் ஆர்சிபிக்கு வந்து உதவினேன் என்றால் எங்கள் அணி ரசிகர்கள் எவ்வாறு நினைப்பார்கள். அவர்களுடைய மனது வருத்தப்படும் அல்லவா?

அவர்கள் இடத்தில் நீங்கள் இருந்தாலும் எப்படி உணர்வீர்கள். எனவே அது முடியாத காரியம். ஐபிஎல் தொடரில் விளையாட போகும் 10 அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன் என்று தோனி பதில் அளித்தார்.

தோனியின் இந்த பதிலைக் கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள். இந்த பதில் மூலம் தோனி சிஎஸ்கேவில் தான் எதிர்காலத்தில் தொடரப் போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags: iplms dhoni crickett20ipl 2024
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

Next Post

கேரளாவில் மேலும் 300 பேருக்கு கொரோனா!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies