பெங்களூரு அணிக்கு உதவி செய்வீர்களா? தோனியிடம் ரசிகர் கேட்ட கேள்வி!
Sep 12, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு அணிக்கு உதவி செய்வீர்களா? தோனியிடம் ரசிகர் கேட்ட கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியிடம் பெங்களூரு அணி குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் அளித்த பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்திய பிரீமியர் லீக் தொடர் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிறது, இந்த 16 ஆண்டுகளும் போட்டியில் விளையாடி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத அணி என்றால் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் அணிகள் என்றே சொல்லலாம்.

இதில் அனைவரிடமும் கவனம் பெற்ற அணி என்றால், அது பெங்களூர் அணி ஏனெனில் பெங்களூரு அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி விளையாடுகிறார். அதுமட்டும் மின்று கிறிஸ் கெயில் இந்த அணியில் முன்னாள் வீரராக விளையாடி வந்தார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்களை குவித்த அணியாகவும் இதுவரை குறைந்த ரன்களை எடுத்த அணியாகவும் திகழ்வது பெங்களூரு அணி தான்.

ஒரு தொடர் முழுக்க சிறப்பாக விளையாடி இறுதியில் வெற்றி வாய்ப்பை தவறவிடும் அணி தான் பெங்களூரு. எவ்வளவு முயற்சி செய்து இந்த 16 வருடங்களில் பெங்களூரு அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்துள்ளது. இந்த சமயத்தில் ரசிகர்கள் ஒருவர் தோனியிடம் கேட்ட கேள்வி இணையத்தில் வரைலாகி வருகிறது.

அதில் ரசிகர், ” நான் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகர், நீங்கள் ஐந்து கோப்பையை சிஎஸ்கே அணிக்காக வென்று கொடுத்து விட்டீர்கள், ஆனால் எங்களால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. ஏன் நீங்கள் ஆர்சிபி அணிக்கு வந்து கோப்பையை வெல்வதற்கு உதவி செய்யக்கூடாது” என்று கேள்வி கேட்டார்.

அதற்கு தோனி, ” ஆர்சிபி என்பது மிகவும் நல்ல அணி. ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை உங்களுடைய திட்டப்படி எப்போதுமே சரியாக நடைபெறாது. ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் அனைத்து 10 அணிகளுமே பலம் வாய்ந்த வீரர்களை தான் தேர்வு செய்கிறார்கள். பிரச்சனையே சில வீரர்கள் சில போட்டிகளில் காயம் அடைந்து விளையாட முடியாத சூழல் ஏற்படுகிறது. இதன் மூலம் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.

நான் ஏற்கெனவே சொன்னது போல ஆர்சிபி நல்ல அணி தான். ஆனால் எங்கள் அணியிலுமே தற்போது பிரச்சனை இருக்கிறது. நான் என் அணி குறித்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கிறது. இதில் நான் எப்படி மற்ற அணிக்கு வந்து உதவ முடியும். நான் ஆர்சிபிக்கு வந்து உதவினேன் என்றால் எங்கள் அணி ரசிகர்கள் எவ்வாறு நினைப்பார்கள். அவர்களுடைய மனது வருத்தப்படும் அல்லவா?

அவர்கள் இடத்தில் நீங்கள் இருந்தாலும் எப்படி உணர்வீர்கள். எனவே அது முடியாத காரியம். ஐபிஎல் தொடரில் விளையாட போகும் 10 அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன் என்று தோனி பதில் அளித்தார்.

தோனியின் இந்த பதிலைக் கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள். இந்த பதில் மூலம் தோனி சிஎஸ்கேவில் தான் எதிர்காலத்தில் தொடரப் போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags: iplms dhoni crickett20ipl 2024
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

Next Post

கேரளாவில் மேலும் 300 பேருக்கு கொரோனா!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies