அணுசக்தித் திறனை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்!
Jan 14, 2026, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அணுசக்தித் திறனை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணுசக்தித் திறனை 7,480 மெகா வாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகா வாட்டாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும், கேள்வி நேரமும் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், கேள்வி நேரத்தின்போது அணுசக்தி தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார்.

அதில் அமைச்சர் ஜிதேந்திர சிங், “2013-14-ல் அணுமின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 35,334 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த மின் உற்பத்தி 2022-23-ல் 46,982 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. அதேபோல, 2013-14-ல் 4,780 மெகா வாட்டாக இருந்த நிறுவப்பட்ட அணுமின் திறன், தற்போது 7,480 மெகா வாட்டை எட்டி இருக்கிறது.

தற்போது 23 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான், தமிழகம், ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 8,000 மெகா வாட் திறன் கொண்ட 10 அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட 10 அணு உலைகள் தொடர்பான திட்டத்திற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை, 2031-32-க்குள் படிப்படியாக முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் அணு மின் உற்பத்தி தொடர்ந்து சிறந்த பாதுகாப்பை வெளிப்படுத்தி வருகிறது.

2070-க்குள் நிகர பூஜ்ஜிய பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கு, அணுசக்தி திறனை விரிவாக்குவது நாட்டின் ஆற்றல் மாற்றத்திற்கு உதவும். மேலும், டி.பி.ஐ.ஐ.டி. ஸ்டார்ட்-அப் இந்தியா போர்ட்டலின்படி, விண்வெளி ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 2014-ல் ஒன்றிலிருந்து 2023-ல் 189 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த ஆண்டு இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப்களில் முதலீடு 124 மில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது. இந்திய விண்வெளிப் பொருளாதாரத்தின் தற்போதைய அளவு சுமார் 8.4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் 2 முதல் 3 சதவீதம் வரை இருக்கும்.

இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ன் அமலாக்கத்தின் மூலம் இந்திய விண்வெளி 2033-க்குள் 44 பில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தை அடைய முடியும்” என்றார்.

Tags: Parliamentjitendra singhnuclear power
ShareTweetSendShare
Previous Post

சச்சினின் 14 வருடச் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்!

Next Post

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் போலீசார் சோதனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies