அணுசக்தித் திறனை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்!
Oct 22, 2025, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அணுசக்தித் திறனை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்!

Web Desk by Web Desk
Dec 21, 2023, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணுசக்தித் திறனை 7,480 மெகா வாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகா வாட்டாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும், கேள்வி நேரமும் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், கேள்வி நேரத்தின்போது அணுசக்தி தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார்.

அதில் அமைச்சர் ஜிதேந்திர சிங், “2013-14-ல் அணுமின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 35,334 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த மின் உற்பத்தி 2022-23-ல் 46,982 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. அதேபோல, 2013-14-ல் 4,780 மெகா வாட்டாக இருந்த நிறுவப்பட்ட அணுமின் திறன், தற்போது 7,480 மெகா வாட்டை எட்டி இருக்கிறது.

தற்போது 23 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான், தமிழகம், ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 8,000 மெகா வாட் திறன் கொண்ட 10 அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட 10 அணு உலைகள் தொடர்பான திட்டத்திற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை, 2031-32-க்குள் படிப்படியாக முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் அணு மின் உற்பத்தி தொடர்ந்து சிறந்த பாதுகாப்பை வெளிப்படுத்தி வருகிறது.

2070-க்குள் நிகர பூஜ்ஜிய பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கு, அணுசக்தி திறனை விரிவாக்குவது நாட்டின் ஆற்றல் மாற்றத்திற்கு உதவும். மேலும், டி.பி.ஐ.ஐ.டி. ஸ்டார்ட்-அப் இந்தியா போர்ட்டலின்படி, விண்வெளி ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 2014-ல் ஒன்றிலிருந்து 2023-ல் 189 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த ஆண்டு இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப்களில் முதலீடு 124 மில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது. இந்திய விண்வெளிப் பொருளாதாரத்தின் தற்போதைய அளவு சுமார் 8.4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் 2 முதல் 3 சதவீதம் வரை இருக்கும்.

இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ன் அமலாக்கத்தின் மூலம் இந்திய விண்வெளி 2033-க்குள் 44 பில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தை அடைய முடியும்” என்றார்.

Tags: Parliamentjitendra singhnuclear power
ShareTweetSendShare
Previous Post

சச்சினின் 14 வருடச் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்!

Next Post

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் போலீசார் சோதனை!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies