அணுசக்தித் திறனை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்!
Jul 29, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அணுசக்தித் திறனை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணுசக்தித் திறனை 7,480 மெகா வாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகா வாட்டாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும், கேள்வி நேரமும் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், கேள்வி நேரத்தின்போது அணுசக்தி தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார்.

அதில் அமைச்சர் ஜிதேந்திர சிங், “2013-14-ல் அணுமின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 35,334 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த மின் உற்பத்தி 2022-23-ல் 46,982 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. அதேபோல, 2013-14-ல் 4,780 மெகா வாட்டாக இருந்த நிறுவப்பட்ட அணுமின் திறன், தற்போது 7,480 மெகா வாட்டை எட்டி இருக்கிறது.

தற்போது 23 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான், தமிழகம், ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 8,000 மெகா வாட் திறன் கொண்ட 10 அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட 10 அணு உலைகள் தொடர்பான திட்டத்திற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை, 2031-32-க்குள் படிப்படியாக முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் அணு மின் உற்பத்தி தொடர்ந்து சிறந்த பாதுகாப்பை வெளிப்படுத்தி வருகிறது.

2070-க்குள் நிகர பூஜ்ஜிய பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கு, அணுசக்தி திறனை விரிவாக்குவது நாட்டின் ஆற்றல் மாற்றத்திற்கு உதவும். மேலும், டி.பி.ஐ.ஐ.டி. ஸ்டார்ட்-அப் இந்தியா போர்ட்டலின்படி, விண்வெளி ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 2014-ல் ஒன்றிலிருந்து 2023-ல் 189 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த ஆண்டு இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப்களில் முதலீடு 124 மில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது. இந்திய விண்வெளிப் பொருளாதாரத்தின் தற்போதைய அளவு சுமார் 8.4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் 2 முதல் 3 சதவீதம் வரை இருக்கும்.

இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ன் அமலாக்கத்தின் மூலம் இந்திய விண்வெளி 2033-க்குள் 44 பில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தை அடைய முடியும்” என்றார்.

Tags: Parliamentjitendra singhnuclear power
ShareTweetSendShare
Previous Post

சச்சினின் 14 வருடச் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்!

Next Post

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் போலீசார் சோதனை!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies