மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இந்நிலையில் பேரிடர் மீட்பு படை மற்றும் ராணுவத்தினர், இந்தியக் கடலோரக் காவல்படை உள்ளிட்டவை மீட்புபணிகளில் ஈடுப்பட்டனர். பொது மக்கள் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்க்கப்பட்டனர். தற்போது இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக இணைப் பொறுப்பாளர்
ரெட்டி சுதாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Honourable Finance Minister, Smt @nsitharaman avl, we thank you for meeting us at short notice today, along with Hon MoS Thiru @Murugan_MoS avl & @BJP4TamilNadu Co-incharge Thiru @ReddySudhakar21 avl.
We thank you for taking into account the devastating effect the flood has… https://t.co/zwqcxxIhQk
— K.Annamalai (@annamalai_k) December 22, 2023
தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்படுத்திய பேரழிவைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, டிசம்பர் 20ஆம் தேதி முதல் தென் தமிழகத்தில் இருந்து, ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் வகையில், அமைச்சுக்களுக்கு இடையேயான குழுவை விரைந்து அனுப்பியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.