சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளது! - கௌதம் கம்பீர்
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளது! – கௌதம் கம்பீர்

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது மூலம் கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து முக்கிய காரணமாக அமைந்தார்.

மேலும் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகமுக்கியமான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இந்த சதம் அமைந்தது. இதற்கு ரசிகர்களும் சஞ்சுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து அவர், ” சஞ்சு சாம்சன் எவ்வளவு திறமையான கிரிக்கெட் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் தொடரில் அவர் ஆடிய இன்னிங்ஸ்களை பற்றி ஒவ்வொருவரும் பேசியிருக்கிறோம். ஆனால் இந்த ஒரு இன்னிங்ஸ் மூலமாக அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே மீண்டும் தொடங்கிவிட்டதாக நினைக்கிறேன். ஏனென்றால் இந்த இன்னிங்ஸ்-க்கு முன்பு வரை அவருக்கு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து வந்தது.

சில நேரங்களில் அணியில் இருந்து நீக்கப்படுவார், சில நேரங்களில் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் ஒரு சதத்தை விளாசியதன் மூலமாக தேர்வு குழுவினரை மட்டும் சஞ்சு சாம்சன் ஈர்க்கவில்லை. அவர் தேர்வுக் குழுவினரை அழுத்தத்தில் தள்ளியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த இன்னிங்ஸ்-க்கு பின் இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி பயன்படுத்தி கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் அடுத்த உலகக்கோப்பைக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது.

அதனால் திறமையான சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். இந்திய அணிக்கு எப்போதும் பலமான மிடில் ஆர்டர் அமைந்துவிடும். ஆனால் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனை போன்ற ஒரு வீரரின் தேவை உள்ளது. அதனால் தான், சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியதாக கூறுகிறேன்.

அவரால் சூழலுக்கு ஏற்ப விளையாட முடிவதன் மூலமாக அனுபவத்தை அறிந்து கொள்ள முடிகிறது. சரியான நேரத்தில் அட்டாக்கை தொடங்கி, உடன் விளையாடும் வீரரையும் அழைத்து செல்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டை அதிகமாக விளையாடியதோடு, ஐபிஎல் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதனால் அவருக்கு அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பது நன்றாக தெரியும்.

அதேபோல் எந்த பவுலரை அடிக்க வேண்டும் என்று கணக்கீடுகளையும் சஞ்சு சாம்சனால் எளிதாக அறிய முடிகிறது. அது அவ்வளவு எளிதாக விஷயமல்ல. இந்த ஒரு இன்னிங்ஸ் மூலமாக சஞ்சு சாம்சனால் என்ன செய்ய முடியும் என்பது மீண்டும் நிரூபித்துள்ளர்” என்று கூறினார்.

Tags: indian cricket teamgautam gambhirSanju Samson Cricket
ShareTweetSendShare
Previous Post

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம்!

Next Post

தென் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies