சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளது! - கௌதம் கம்பீர்
Oct 25, 2025, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளது! – கௌதம் கம்பீர்

Web Desk by Web Desk
Dec 23, 2023, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது மூலம் கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து முக்கிய காரணமாக அமைந்தார்.

மேலும் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகமுக்கியமான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இந்த சதம் அமைந்தது. இதற்கு ரசிகர்களும் சஞ்சுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து அவர், ” சஞ்சு சாம்சன் எவ்வளவு திறமையான கிரிக்கெட் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் தொடரில் அவர் ஆடிய இன்னிங்ஸ்களை பற்றி ஒவ்வொருவரும் பேசியிருக்கிறோம். ஆனால் இந்த ஒரு இன்னிங்ஸ் மூலமாக அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே மீண்டும் தொடங்கிவிட்டதாக நினைக்கிறேன். ஏனென்றால் இந்த இன்னிங்ஸ்-க்கு முன்பு வரை அவருக்கு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து வந்தது.

சில நேரங்களில் அணியில் இருந்து நீக்கப்படுவார், சில நேரங்களில் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் ஒரு சதத்தை விளாசியதன் மூலமாக தேர்வு குழுவினரை மட்டும் சஞ்சு சாம்சன் ஈர்க்கவில்லை. அவர் தேர்வுக் குழுவினரை அழுத்தத்தில் தள்ளியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த இன்னிங்ஸ்-க்கு பின் இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி பயன்படுத்தி கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் அடுத்த உலகக்கோப்பைக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது.

அதனால் திறமையான சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். இந்திய அணிக்கு எப்போதும் பலமான மிடில் ஆர்டர் அமைந்துவிடும். ஆனால் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனை போன்ற ஒரு வீரரின் தேவை உள்ளது. அதனால் தான், சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியதாக கூறுகிறேன்.

அவரால் சூழலுக்கு ஏற்ப விளையாட முடிவதன் மூலமாக அனுபவத்தை அறிந்து கொள்ள முடிகிறது. சரியான நேரத்தில் அட்டாக்கை தொடங்கி, உடன் விளையாடும் வீரரையும் அழைத்து செல்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டை அதிகமாக விளையாடியதோடு, ஐபிஎல் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதனால் அவருக்கு அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பது நன்றாக தெரியும்.

அதேபோல் எந்த பவுலரை அடிக்க வேண்டும் என்று கணக்கீடுகளையும் சஞ்சு சாம்சனால் எளிதாக அறிய முடிகிறது. அது அவ்வளவு எளிதாக விஷயமல்ல. இந்த ஒரு இன்னிங்ஸ் மூலமாக சஞ்சு சாம்சனால் என்ன செய்ய முடியும் என்பது மீண்டும் நிரூபித்துள்ளர்” என்று கூறினார்.

Tags: indian cricket teamgautam gambhirSanju Samson Cricket
ShareTweetSendShare
Previous Post

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம்!

Next Post

தென் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழப்பு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies