கிசான் ட்ரோன்கள்: பிரதமர் மோடி பாராட்டு!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிசான் ட்ரோன்கள்: பிரதமர் மோடி பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரவ உரங்களைப் பயன்படுத்துவதற்கு பயனுள்ள மற்றும் திறமையான நுட்பத்தை வழங்கும் கிசான் ட்ரோன்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயத்தில் ட்ரோன்களுக்கென மத்திய அரசு கடனுதவி அறிவித்திருக்கிறது. பயிர் வகைகளை மதிப்பீடு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்து தெளிப்பு போன்றவற்றுக்கு கிசான் ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

மேலும், வருங்காலத்தில் விளைபொருட்களை வயல்களில் இருந்து ட்ரோன் மூலம் சந்தைக்கு அனுப்பவும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த கிசான் ட்ரோன் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கிசான் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ட்ரோன் வாங்க மத்திய அரசு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கி வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்த கடன் திட்டத்துக்காக சென்னை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவத்தின் கிசான் ட்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த ட்ரோனை ஆய்வு செய்து, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விவசாயத்துறையில் பயன்படுத்தப்படவிருக்கும் கிசான் ட்ரோன் பற்றி, ஆங்கில நாளிதழில் ஒன்றில் கட்டுரை எழுதி இருக்கிறார். இந்தக் தனது கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இதோ இந்திய விவசாயத்தின் “ட்ரோன் தருணம்”!

நமது விவசாய நடைமுறைகளை நவீனமயமாக்குவதிலும், மாற்றியமைப்பதிலும் வேளாண் ட்ரோன் தொழில்நுட்பம் ஒரு உண்மையான திருப்புமுனையாக எவ்வாறு நிரூபிக்கப்படுகிறது என்பது பற்றிய எனது கட்டுரை. இது “ட்ரோன் இயக்கத்தை” முன்னறிவிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் பதிவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, “கிசான் ட்ரோன்களின் முன்னேற்றம் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM ModiDr Mansukh L. MandaviyaKissan Drone
ShareTweetSendShare
Previous Post

காதலன் ஒரு திருநங்கை – காதலி எடுத்த முடிவு – நடந்த விபரீதம்!

Next Post

இந்தியா மிக வேகமாக மாறி வருகிறது! – குடியரசுத் துணைத் தலைவர்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies