மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.5,228 மானியம்!
Sep 30, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.5,228 மானியம்!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 02:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இந்த ஆண்டு 11.53 லட்சம் மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு 5,228 கோடி ரூபாய் மானியம் வழங்கி இருப்பதாக மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் மின்சார வாகனத்தின் உற்பத்தியைப் பெறுக்கவும், பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஃபேம் திட்டத்தின் 2-வது கட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. போக்குவரத்தில் மின்சார தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புதைபடிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, மின்சாரப் பேருந்துகள், 3 சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, பொதுப் போக்குவரத்து அல்லது வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இரு சக்கர மின்சார வாகனங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், ஃபேம் திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ் 7,090 மின்சாரப் பேருந்துகள், 5 லட்சம் மூன்று சக்கர மின்சார வாகனங்கள், 55,000 நான்கு சக்கர மின்சார வாகனங்கள் கார்கள், 10 லட்சம் இரு சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, மின்சார வாகனங்களுக்கான பாகங்கள் தொடர்பான தொழில்நுட்பங்களை மேம்படுத்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 25,938 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதியுதவிகள் வழங்கப்படுகிறது.

இதுதவிர, மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியை மேம்படுத்த, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 18,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதேசமயம், இரு சக்கர வாகனங்களுக்கான ஊக்கத்தொகை 2021  ஜூன் 11 முதல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கனரக தொழில்கள் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இதுபோல்  மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் 7,432 பொது ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக பி.எஸ்.யூ. ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு 800 கோடி ரூபாயை அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.

தற்போது நாட்டில் மொத்தம் 148 எலெக்ட்ரானிக் வாகனங்கள் பொது சார்ஜிங் நிலையங்கள் செயல்படுவதாக கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 11.53 லட்சம் மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு 5,228 கோடி ரூபாய் மானியம் வழங்கி இருக்கிறது. மேலும், நாட்டில் சுத்தமான மற்றும் பசுமையான பொது போக்குவரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது”என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Govt givesRs 5228 crore subsidyElectric Vehicles
ShareTweetSendShare
Previous Post

சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை – காரணம் என்ன?

Next Post

மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு : உயிரிழந்த ஐஐடி பேராசிரியர்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies