மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.5,228 மானியம்!
Sep 13, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.5,228 மானியம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 02:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இந்த ஆண்டு 11.53 லட்சம் மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு 5,228 கோடி ரூபாய் மானியம் வழங்கி இருப்பதாக மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் மின்சார வாகனத்தின் உற்பத்தியைப் பெறுக்கவும், பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஃபேம் திட்டத்தின் 2-வது கட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. போக்குவரத்தில் மின்சார தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புதைபடிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, மின்சாரப் பேருந்துகள், 3 சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, பொதுப் போக்குவரத்து அல்லது வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இரு சக்கர மின்சார வாகனங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், ஃபேம் திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ் 7,090 மின்சாரப் பேருந்துகள், 5 லட்சம் மூன்று சக்கர மின்சார வாகனங்கள், 55,000 நான்கு சக்கர மின்சார வாகனங்கள் கார்கள், 10 லட்சம் இரு சக்கர மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, மின்சார வாகனங்களுக்கான பாகங்கள் தொடர்பான தொழில்நுட்பங்களை மேம்படுத்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 25,938 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதியுதவிகள் வழங்கப்படுகிறது.

இதுதவிர, மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியை மேம்படுத்த, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 18,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதேசமயம், இரு சக்கர வாகனங்களுக்கான ஊக்கத்தொகை 2021  ஜூன் 11 முதல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கனரக தொழில்கள் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இதுபோல்  மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் 7,432 பொது ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக பி.எஸ்.யூ. ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு 800 கோடி ரூபாயை அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.

தற்போது நாட்டில் மொத்தம் 148 எலெக்ட்ரானிக் வாகனங்கள் பொது சார்ஜிங் நிலையங்கள் செயல்படுவதாக கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 11.53 லட்சம் மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு 5,228 கோடி ரூபாய் மானியம் வழங்கி இருக்கிறது. மேலும், நாட்டில் சுத்தமான மற்றும் பசுமையான பொது போக்குவரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது”என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Govt givesRs 5228 crore subsidyElectric Vehicles
Share
Tweet
SendShare
Previous Post

சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை – காரணம் என்ன?

Next Post

மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு : உயிரிழந்த ஐஐடி பேராசிரியர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies