முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாட்டின் முன்னாள் பிரதமரும், பாஜக முன்னாள் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 99 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் தன்கர் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.