சனாதனம் நித்தியமானது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதனம் நித்தியமானது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 25, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனம் நித்தியமானது. சனாதனம் இருந்தது, இருக்கிறது, என்றும் நிலைத்திருக்கும். இந்த உலகத்தில் எஞ்சி இருப்பதும் சனாதனம் மட்டும்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஸ்ரீ ஹரிஹர் ஆசிரமத்தில் தெய்வீக ஆன்மிக விழா தொடங்கியது. ஆச்சார்யா மஹாமண்டலேஷ்வர் சுவாமி அவதேஷானந்த் ஜூனகஹாரா ஆச்சார்ய பீடத்தை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘ஸ்ரீதத் ஜெயந்தி’ என்கிற பெயரில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விழாவை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், யோகா குரு சுவாமி ராம்தேவ், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் சமய மாநாடு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் நாடு முழுவதும் உள்ள துறவிகள் கலந்து கொள்கிறார்கள்.

டிசம்பர் 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் அரசியல் மற்றும் ஆன்மிகவாதிகள் ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள். விழாவில் உரையாற்றிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், “நான் ஆச்சார்யா ஸ்ரீயின் ஹரிஹர் ஆசிரமத்திற்கு வந்திருக்கிறேன். இன்று நிச்சயம் எனக்கு நல்ல நாள். பல மகான்களை ஒன்றாகப் பார்ப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

மகான்களின் வார்த்தைகளால் பல நன்மைகளைப் பெறுகிறோம். இது சமுதாயத்தில் பணியாற்ற எனக்கு உத்வேகம் அளிக்கிறது. கீதையில் சாரமும், போதனைகளும் உள்ளன. சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாக இருக்க கீதை மிகவும் முக்கியமானது. அதனால்தான் பள்ளிகளில் கீதையை அமல்படுத்தி இருக்கிறோம். இது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் மற்றும் சமுதாயத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்யும்” என்றார்.

ஸ்ரீ ஹரிஹர் ஆசிரமத்தில் ‘தெய்வீக ஆன்மிக விழா’வைத் தொடக்கிவைத்து மக்கள் மத்தியில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “சனாதனம் நித்தியமானது. சனாதனம் இருந்தது, இருக்கிறது, என்றும் நிலைத்திருக்கும். இந்த உலகத்தில் எஞ்சி இருப்பதும் சனாதனம்தான்.

பாரதிய மரபுகளில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் ஒரு நபரை புனிதப்படுத்தும். பாரதிய மரபுகளில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் ஒரு விஷயத்திற்கு இட்டுச் செல்கின்றன. அவை உங்களை புனிதப்படுத்தும். எங்களுடையது ஒரு இயக்கமாகவோ அல்லது போராட்டமாகவோ இருக்காது. நாங்கள் இந்து சமுதாயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த குழுவும் அல்ல.

எங்களுடையது இந்து சமுதாயம் முழுவதையும் ஒழுங்கமைத்து விரிவுபடுத்தும். நாம் இன்னும் அணுகாத எத்தனையோ இந்துக்கள் இருக்கிறார்கள். ஆகவே, நாம் எல்லா இடங்களிலும் சென்று அனைவரையும் அடைய வேண்டும். ஒருவர் சில விஷயங்களில் உடன்படலாம், சிலவற்றில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், நாம் அனைவரையும் இணைக்க வேண்டும்” என்றார்.

Tags: Manohar lal KhattarRSS Chiefmohan bhagwatHaridwardivine spiritual festivalHaryana CM
ShareTweetSendShare
Previous Post

ப்ரோ கபடி : பெங்களூரு அணி போராடி வெற்றி!

Next Post

கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும் நினைவு கூர்வோம்! – பிரதமர் மோடி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies