சனாதனம் நித்தியமானது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
May 30, 2025, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதனம் நித்தியமானது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனம் நித்தியமானது. சனாதனம் இருந்தது, இருக்கிறது, என்றும் நிலைத்திருக்கும். இந்த உலகத்தில் எஞ்சி இருப்பதும் சனாதனம் மட்டும்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஸ்ரீ ஹரிஹர் ஆசிரமத்தில் தெய்வீக ஆன்மிக விழா தொடங்கியது. ஆச்சார்யா மஹாமண்டலேஷ்வர் சுவாமி அவதேஷானந்த் ஜூனகஹாரா ஆச்சார்ய பீடத்தை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘ஸ்ரீதத் ஜெயந்தி’ என்கிற பெயரில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விழாவை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், யோகா குரு சுவாமி ராம்தேவ், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் சமய மாநாடு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் நாடு முழுவதும் உள்ள துறவிகள் கலந்து கொள்கிறார்கள்.

டிசம்பர் 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் அரசியல் மற்றும் ஆன்மிகவாதிகள் ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள். விழாவில் உரையாற்றிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், “நான் ஆச்சார்யா ஸ்ரீயின் ஹரிஹர் ஆசிரமத்திற்கு வந்திருக்கிறேன். இன்று நிச்சயம் எனக்கு நல்ல நாள். பல மகான்களை ஒன்றாகப் பார்ப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

மகான்களின் வார்த்தைகளால் பல நன்மைகளைப் பெறுகிறோம். இது சமுதாயத்தில் பணியாற்ற எனக்கு உத்வேகம் அளிக்கிறது. கீதையில் சாரமும், போதனைகளும் உள்ளன. சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாக இருக்க கீதை மிகவும் முக்கியமானது. அதனால்தான் பள்ளிகளில் கீதையை அமல்படுத்தி இருக்கிறோம். இது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் மற்றும் சமுதாயத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்யும்” என்றார்.

ஸ்ரீ ஹரிஹர் ஆசிரமத்தில் ‘தெய்வீக ஆன்மிக விழா’வைத் தொடக்கிவைத்து மக்கள் மத்தியில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “சனாதனம் நித்தியமானது. சனாதனம் இருந்தது, இருக்கிறது, என்றும் நிலைத்திருக்கும். இந்த உலகத்தில் எஞ்சி இருப்பதும் சனாதனம்தான்.

பாரதிய மரபுகளில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் ஒரு நபரை புனிதப்படுத்தும். பாரதிய மரபுகளில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் ஒரு விஷயத்திற்கு இட்டுச் செல்கின்றன. அவை உங்களை புனிதப்படுத்தும். எங்களுடையது ஒரு இயக்கமாகவோ அல்லது போராட்டமாகவோ இருக்காது. நாங்கள் இந்து சமுதாயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த குழுவும் அல்ல.

எங்களுடையது இந்து சமுதாயம் முழுவதையும் ஒழுங்கமைத்து விரிவுபடுத்தும். நாம் இன்னும் அணுகாத எத்தனையோ இந்துக்கள் இருக்கிறார்கள். ஆகவே, நாம் எல்லா இடங்களிலும் சென்று அனைவரையும் அடைய வேண்டும். ஒருவர் சில விஷயங்களில் உடன்படலாம், சிலவற்றில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், நாம் அனைவரையும் இணைக்க வேண்டும்” என்றார்.

Tags: mohan bhagwatHaridwardivine spiritual festivalHaryana CMManohar lal KhattarRSS Chief
ShareTweetSendShare
Previous Post

ப்ரோ கபடி : பெங்களூரு அணி போராடி வெற்றி!

Next Post

கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும் நினைவு கூர்வோம்! – பிரதமர் மோடி

Related News

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி : கேள்விக்குறியான செவ்வாய் கிரக பயண திட்டம்!

குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!

காட்சிப்பொருளான நீர்மோர் பந்தல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!

பன்முக நாயகன் ராஜேஷ் : சிறப்பு தொகுப்பு!

மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி சூளுரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு – மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்!

பாகிஸ்தான், போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியது : பிரதமர் மோடி

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து குற்றங்கள் சாதாரண ஒன்றாகிவிட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பல மதங்கள் இருந்தாலும், தர்மம் என்றால் அது சனாதன தர்மம் மட்டும்தான் : ஆளுநர் ஆர்.என். ரவி

பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது – நயினார் நாகேந்திரன்

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்தது : பிரதமர் மோடி

முதுகலை நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies