முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமது எக்ஸ் பதிவில், தன்னலமற்ற சமூக சேவையாளர், தன் வாழ்க்கையை மக்கள் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்து, மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றிருக்கும் முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளில் ஜனநாயகத்திற்கான அவரது அர்ப்பணிப்பையும் சேவையையும் போற்றி வணங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.