குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!
Mar 15, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 25, 2023, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு துணைத் தலைவர் என்கிற முக்கியப் பொறுப்பை வகிக்கும் நிலையிலும்கூட என்னை சிலர் அவமதித்துத்தான் வருகின்றனர் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வேதனை தெரிவித்திருக்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய புள்ளியியல் பணி (ஐ.எஸ்.எஸ்.) பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பேசுகையில், “நான் எனது வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில் அவமதிப்புகளுக்கும், ஏளனத்துக்கும் ஆளாகி இருக்கிறேன்.

தற்போது குடியரசுத் துணைத் தலைவரான பிறகும் அவமதிப்புகள் தொடர்கின்றன. ஆனால், இதற்கு பயந்து நாட்டுக்கு சேவையாற்றும் எனது கடமையில் இருந்து பின்வாங்கிவிடவில்லை. அதேபோல உங்களுக்கும் பணியில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ளும் சூழல் வரும்.

தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும், அவமதிப்புகளும் நிகழ வாய்ப்பு இருக்கிறது. அதற்காக மனம் தளர்ந்து நாட்டுக்கான உங்கள் கடமையில் இருந்து விலகிவிடக் கூடாது. நம்மை அவமதிப்பவர்களின் மனப்பாங்கை நாம் மாற்ற முடியாது.

எனினும், அவர்களை மாற்ற முடியவில்லை என்பதற்காக நாம் நமது கடமையைச் செய்யாமல் இருக்கக் கூடாது. இளம் அதிகாரிகளான நீங்கள் நாட்டுக்கான உங்கள் கடமையை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, மக்களவையில் புகைக் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இவர்கள் 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து, அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கல்யாண் பானா்ஜி, மாநிலங்களவைத் தலைவா் ஜெக்தீப் தன்கரைப் போல நடித்துக் காட்டி கேலி கிண்டல் செய்தார்.

இதை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி செல்போனில் வீடியோ எடுத்தார். இச்சம்பவம் தொடா்பாக மாநிலங்களவையில் பேசிய ஜெக்தீப் தன்கர், விவசாயியின் மகன் மற்றும் ஜாட் சமூகத்தைச் சோ்ந்தவர் என்பதால், தான் அவமதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டாா்.

மேலும், நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஜெக்தீப் தன்கரை வேண்டுமென்றே அவமதிக்கும் நோக்கத்துடன் எதிர்கட்சிகள் செயல்பட்டதாக பா.ஜ.க. தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: ParliamentinsultJagdeep Dhankar
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை : பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு!

Next Post

ஸ்டாலின் சொன்ன கிருஷ்துமஸ் பொய்!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies