குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!
Oct 6, 2025, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு துணைத் தலைவர் என்கிற முக்கியப் பொறுப்பை வகிக்கும் நிலையிலும்கூட என்னை சிலர் அவமதித்துத்தான் வருகின்றனர் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வேதனை தெரிவித்திருக்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய புள்ளியியல் பணி (ஐ.எஸ்.எஸ்.) பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பேசுகையில், “நான் எனது வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில் அவமதிப்புகளுக்கும், ஏளனத்துக்கும் ஆளாகி இருக்கிறேன்.

தற்போது குடியரசுத் துணைத் தலைவரான பிறகும் அவமதிப்புகள் தொடர்கின்றன. ஆனால், இதற்கு பயந்து நாட்டுக்கு சேவையாற்றும் எனது கடமையில் இருந்து பின்வாங்கிவிடவில்லை. அதேபோல உங்களுக்கும் பணியில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ளும் சூழல் வரும்.

தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும், அவமதிப்புகளும் நிகழ வாய்ப்பு இருக்கிறது. அதற்காக மனம் தளர்ந்து நாட்டுக்கான உங்கள் கடமையில் இருந்து விலகிவிடக் கூடாது. நம்மை அவமதிப்பவர்களின் மனப்பாங்கை நாம் மாற்ற முடியாது.

எனினும், அவர்களை மாற்ற முடியவில்லை என்பதற்காக நாம் நமது கடமையைச் செய்யாமல் இருக்கக் கூடாது. இளம் அதிகாரிகளான நீங்கள் நாட்டுக்கான உங்கள் கடமையை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, மக்களவையில் புகைக் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இவர்கள் 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து, அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கல்யாண் பானா்ஜி, மாநிலங்களவைத் தலைவா் ஜெக்தீப் தன்கரைப் போல நடித்துக் காட்டி கேலி கிண்டல் செய்தார்.

இதை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி செல்போனில் வீடியோ எடுத்தார். இச்சம்பவம் தொடா்பாக மாநிலங்களவையில் பேசிய ஜெக்தீப் தன்கர், விவசாயியின் மகன் மற்றும் ஜாட் சமூகத்தைச் சோ்ந்தவர் என்பதால், தான் அவமதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டாா்.

மேலும், நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஜெக்தீப் தன்கரை வேண்டுமென்றே அவமதிக்கும் நோக்கத்துடன் எதிர்கட்சிகள் செயல்பட்டதாக பா.ஜ.க. தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: ParliamentinsultJagdeep Dhankar
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை : பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு!

Next Post

ஸ்டாலின் சொன்ன கிருஷ்துமஸ் பொய்!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies