குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!
Sep 12, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 25, 2023, 12:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு துணைத் தலைவர் என்கிற முக்கியப் பொறுப்பை வகிக்கும் நிலையிலும்கூட என்னை சிலர் அவமதித்துத்தான் வருகின்றனர் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வேதனை தெரிவித்திருக்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய புள்ளியியல் பணி (ஐ.எஸ்.எஸ்.) பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பேசுகையில், “நான் எனது வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில் அவமதிப்புகளுக்கும், ஏளனத்துக்கும் ஆளாகி இருக்கிறேன்.

தற்போது குடியரசுத் துணைத் தலைவரான பிறகும் அவமதிப்புகள் தொடர்கின்றன. ஆனால், இதற்கு பயந்து நாட்டுக்கு சேவையாற்றும் எனது கடமையில் இருந்து பின்வாங்கிவிடவில்லை. அதேபோல உங்களுக்கும் பணியில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ளும் சூழல் வரும்.

தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும், அவமதிப்புகளும் நிகழ வாய்ப்பு இருக்கிறது. அதற்காக மனம் தளர்ந்து நாட்டுக்கான உங்கள் கடமையில் இருந்து விலகிவிடக் கூடாது. நம்மை அவமதிப்பவர்களின் மனப்பாங்கை நாம் மாற்ற முடியாது.

எனினும், அவர்களை மாற்ற முடியவில்லை என்பதற்காக நாம் நமது கடமையைச் செய்யாமல் இருக்கக் கூடாது. இளம் அதிகாரிகளான நீங்கள் நாட்டுக்கான உங்கள் கடமையை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, மக்களவையில் புகைக் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இவர்கள் 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து, அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கல்யாண் பானா்ஜி, மாநிலங்களவைத் தலைவா் ஜெக்தீப் தன்கரைப் போல நடித்துக் காட்டி கேலி கிண்டல் செய்தார்.

இதை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி செல்போனில் வீடியோ எடுத்தார். இச்சம்பவம் தொடா்பாக மாநிலங்களவையில் பேசிய ஜெக்தீப் தன்கர், விவசாயியின் மகன் மற்றும் ஜாட் சமூகத்தைச் சோ்ந்தவர் என்பதால், தான் அவமதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டாா்.

மேலும், நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஜெக்தீப் தன்கரை வேண்டுமென்றே அவமதிக்கும் நோக்கத்துடன் எதிர்கட்சிகள் செயல்பட்டதாக பா.ஜ.க. தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: ParliamentinsultJagdeep Dhankar
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலை : பெருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அதிகரிப்பு!

Next Post

ஸ்டாலின் சொன்ன கிருஷ்துமஸ் பொய்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies